எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

திங்கள், 8 செப்டம்பர், 2025

வடக்கன்களின் அடிமைகளுக்கு எதற்கு ஆளுக்கொரு அரசியல் கட்சி?!

‘பாஜக’ தலைவர்களைச் சந்திக்கச் செங்கோட்டையன் தில்லி செல்கிறார்’ என்பது ஊடகங்களில் வெளியான/வெளியாகும் பரபரப்பான[ஆக்கப்படும்] செய்தி.

யார் இந்தச் செங்கோட்டையன்?

பல ஆண்டுகளுக்கு முன்பு, செல்வியும் புரட்சித் தலைவியும் தெய்வத் தாயுமான ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றத்தில் துகிலுரியப்பட்டபோது[?], அம்மையாருக்குப் பாதுகாப்புக் கவசமாகத் திகழ்ந்தவர் இவர். அதன் மூலம் பிரபலம் ஆனவர்; ‘அதிமுக’வின் முக்கியப் பிரமுகராக ஆக்கப்பட்டவர்.

அம்மையாரின் மறைவுக்குப் பிறகு, எடப்பாடியின் தலைமையில் வடபுலத்துச் சங்கிக் கட்சித் தலைவர்களுக்குச் சேவகம் புரிந்தவர்களில் இவரும் ஒருவர்.

எடப்பாடியால் ஓரங்கட்டப்பட்டு இருந்த இடம் தெரியாமலிருந்த இவர், ஓர் அறிக்கை வெளியிட்டு[கட்சியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்]த் தன் இருப்பைப் பகிரங்கப்படுத்திக்கொண்டிருப்பவர்.

தில்லி செல்கிறாராம். எதற்கு?

வடக்கன்களின் தமிழ்நாட்டு அடிமைகள் பட்டியலில் ஒரு ‘தலைவனாக’த் தன்னையும் சேர்த்துக்கொள்வதற்கு.

ஓபிஎஸ், சசிகலா என்னும் புரட்சித் தாய், தினகரன்(அமமுக), அன்புமணி(பாமக), ஜி. கே. வாசன்(த.நா.கா.கட்சி) ஆகியோர் ஏற்கனவே அந்தப் பட்டியலில் இடம்பெற்றவர்கள். 

ஆக, இப்போது நடக்கவிருப்பது, தமிழ்நாட்டு அடிமைகள் அணி தாங்கள் என்றென்றும் வடபுலச் சங்கிகளின் அடிமைகளே என்பதைப் புதுப்பித்துக்கொள்ளும் ஒரு சடங்குதான்.

இந்த அடிமைக் கும்பலுக்கு நாம் அறிவுறுத்த விரும்புவது:

தமிழனின் தன்மானத்தை வ.பு.சுயநலக் கும்பலிடம் விலைபேசிவிட்ட உங்களுக்கு எதற்குத் தனித் தனிக் கட்சி?

எல்லோரும் ஒருங்கிணைந்து, ஒரு புதியக் கட்சியைத் தொடங்கி, அதற்குத் ‘தமிழ்நாட்டு அடிமைகள் கட்சி’ என்று பெயர் சூட்டிக்கொண்டு ஒன்றாகவே தில்லி செல்லுங்கள்.

உங்களின் அடகு வைக்கும் அருங்குணத்தை மெச்சி, உங்களின் எதிர்பார்ப்புகளை ஓரளவிற்கேனும் நிறைவேற்றி ஆசீர்வதிப்பார்கள் ‘அவர்கள்’.

வாழ்க தமிழ்நாட்டு அரசியல் அடிமைகள்! வளர்க அவர்களின் அடிமைப் புத்தி!!