தமிழாசிரியர் சொன்னார்:
"பத்து வரியில் கவிதை எழதணும்."
தலைப்பு... 'நான் கண்ட கனவு'.
மாணவர்கள் உற்சாகமாக எழுதினார்கள்.
அனைத்தையும் படித்தார் தமிழாசிரியர்.
முதலாவது.....
//இந்திய-பாகிஸ்தான் ஒரு நாள்
கிரிக்கெட் போட்டியில் நான் சதம் அடித்தேன்.
ரசிகர்களின் கரவொலியில் கனவு கலைந்தது//
அடுத்தது.....
//வகுப்பறையில் கவிதை எழுதினேன்.
காதல் கவிதை. அடி பின்னியெடுத்தார் ஆசிரியர்.
என் கற்பனை கலைந்தது//
அடுத்தடுத்த கவிதைகளும் ரசிக்கவைத்தன.
கடைசியாக ‘அவன்’ கவிதை.
அது…..
//கல்யாணப் பந்தியில் நான்.
என் இலையில்
பொறியலும் கூட்டும் இனிப்புகளும் பிரியாணியும்.
ஆசையாக இலையில் கை வைத்தேன்.
அத்தனைப் பண்டங்களும் காணாமல் போயின.
சுத்தி இருந்தவங்க வாய்விட்டுச் சிரிச்சாங்க.
நான் “அய்யோ”ன்னு அழுதேன்.
“ஏன்டா அழுறே?"...அம்மா. என் கனவு கலைந்தது//
ஆசிரியர் உட்பட
எல்லோர் முகங்களிலும் அடர் சோகம்.
=======================
*** ‘அவன்’ ஒரு குடிகாரக் கூலித் தொழிலாளியின் மகன்.

