அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 4 அக்டோபர், 2013

"தமிழ்நாடு பிரியும்” ---சுஜாதா அன்று ஏன் இப்படிச் சொன்னார்?!?!

இந்தித் திணிப்பு, சமஸ்கிருதத் திணிப்பு, 'நீட்' திணிப்பு, மூடநம்பிக்கைத் திணிப்பு, கடைசியாகக் கன்னடன் சூரப்பாவின் துணைவேந்தர் நியமனம்  என்று எதை எதையோ திணி திணி என்று திணித்துக்கொண்டிருக்கிறது மோடி அரசு. 

அடுத்து வருவது, சற்று முன்னர்[08.09.2020 காலை 07.35 மணி] தினத்தந்தி நாளிதழில் வாசித்த ‘திடு’ செய்தி.

//                                   இந்திப் பிரிவில் தமிழர்களுக்குப் பணி

தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அரசு அதிகாரிகள் மீது இந்தித் திணிப்பு

                 ஜி.எஸ்.டி. உதவி கமிஷணர் பரபரப்புக் குற்றச்சாட்டு                //

தமிழனுக்குத் தலைக்குனிவை ஏற்படுத்துகிற இன்றைய சூழலில் எழுத்தாளர் சுஜாதாவின் இக்கட்டுரை மீள்பதிவு செய்யப்படுகிறது.

“இன்னும் முப்பத்தேழு ஆண்டுகளில் தமிழ்நாடு ஒரு சுதந்திரப் பிரதேசம் ஆகும்” என்று 1993 இல் எழுதிய ஒரு கட்டுரையில் குறிப்பிட்டிருக்கிறார் சுஜாதா. அவர் தீர்க்கதரிசியல்ல; ஆனாலும் சிறந்த சிந்தனையாளர்; மகா புத்திசாலியும்கூட!

கட்டுரையை ஐந்தில் ஒரு பங்காகச் சுருக்கியிருக்கிறேன்.

ன்றைய தினம் லட்சக்கணக்கானவர்கள் டைப் அடித்தும், கயிறு சுற்றியும், மூடி போட்டும், லேபிள் ஒட்டியும் அற்பத்தனமான வேலைகளில் சிறைப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையிலிருந்து அவர்கள் விடுதலை பெற்றுவிடுவார்கள் என்று எதிர்பார்க்கிறார்கள், டெக்னாலஜி மூலம்.

இப்போது பல வேலைகள் புதிதாகத் தோன்றிக்கொண்டிருப்பதை நீங்கள் கவனிக்கலாம்.

ஆஸ்பத்திரிகளில் ஸிடி ஸ்கேன், எம் ஆர் ஐ ஸ்கேன் எடுப்பது; ஃபேக்ஸ் எந்திரம், டெலிபிரிண்டர் ரிப்பேர் செய்வது. கிராமங்களில், சூரிய ஒளி பானல்கள் அமைப்பது; டி.வி க்கு இணைப்புத் தருவது; வீடு வீடாகப் போய் டெலிஃபோனுக்கு செண்ட் அடிப்பது என்று நிறையப் புதுப் புது வேலைகள்.

எல்லாமே சுவாரஸ்யமானவை.

இனி, சுவாரஸ்யமற்ற வேலைகளைக் கணிப்பொறிகள் மட்டுமே செய்யும்.

புதிய வேலைகளுக்குப் புதிய புதிய திறமை கொண்ட மனிதர்கள் தேவைப்படுகிறார்கள்.

இம்மாதிரி தொழில் தெரிந்தவர்களுக்கு மதிப்பு அதிகம்; வருமானமும் அதிகம். ஒரு நாள் டெக்னீஷியன் வரவில்லையென்றால், சில டாக்டர்கள் ஆயிரக் கணக்கில் வருமானம் இழப்பார்கள்.

இனி வருங்காலத்தில், தவிர்க்க இயலாத இந்த டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியால், சில அடிப்படைகள் கலைக்கப்பட்டுவிடும்.

அறுபது, எழுபது வயது முதியவர், டெலிஃபோன் மூலம் ஒரு சிக்கலான சாதனத்தைப் பழுது பார்த்துத் திருத்த முடியும்; தூரத்தில் உள்ள பிள்ளைகளுக்குப் பாடம் சொல்லித் தருவார், தன் ஞானத்தை...அனுபவத்தைப் பயன்படுத்தி, ஒரு தாய் தொட்டிலை ஆட்டிக்கொண்டே அவ்வப்போது ஒரு கணிப்பொறித் திரையில் சில தனிப்பட்ட செய்திகளை விரும்பினவர்களுக்குத் தர முடியும். பன்னிரண்டு வயதுச் சிறுமி தன் பன்னிரண்டு வயதுத் திறமைகளை மட்டும் பயன்படுத்தி மாதம் ஐயாயிரம் சம்பாதிக்க முடியும்.

மற்றபடி, வீடு பெருக்குதல், சாணி தெளித்தல், அலம்புதல், கூட்டுதல், இணைத்தல் போன்ற ‘போர்’ அடிக்கும் வேலைகளை இயந்திரங்கள் செய்யும்.
வேலை என்பது விரும்பினபோது எல்லோருக்கும் கிடைக்கும்

எந்தத் திறமையாக இருந்தாலும் அதற்கேற்ப வேலை கிடைக்கும். 
வேலை எப்போதும் சுவாரஸ்யமாக இருக்கும்

இந்தியாவில் இந்த நிலை எப்போது வரும் என்று கேட்பின் இந்த நாடு முதலில் சில சௌகரியமான அம்சங்களாகப் பிரிய வேண்டும்.


கர்னாடகம், தமிழ்நாடு, ஆந்திரம், பஞ்சாப் போன்ற மாநிலங்கள் யாவும் ஜப்பானையும் விட அதிகப் பரப்பளவும் ஜனத்தொகையும் கொண்டவை.
இவை அனைத்தும் தனிப்பட்ட சுதந்திரப் பிரதேசங்களாக நிச்சயம் பிரிந்துவிடும். இந்தப் பிரிவைப் பற்றி நாம் பயப்படத் தேவையில்லை. இப்போது, முன்னாள் சோவியத் யூனியன் போல, ஐரோப்பியக் கண்டத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் இதற்கு முகமன் கூறுகின்றன.

ஒவ்வொரு மாநிலமும் பிரிந்த பின் அவை கலாச்சாரத்திலும் இனத்திலும் ஒன்றுபட்டு செங்குந்தர், நாடார், ஐயங்கார், கானாடுகாத்தான் செட்டியார் போன்ற பிரிவினைகள் இல்லாமல், ‘ஜப்பானியன்’ என்பது போல, ‘தமிழன்’ என்ற ஒருமை கிடைப்பது இந்த மாறுதல்களுக்கு முதன் முதல் தேவை.

என் கணிப்பில் இது நிகழ இன்னும் முப்பத்தேழு வருஷங்கள் ஆகும்.

 *                                *                               *
சுஜாதாவின் [மறைவு: ஃபிப்ரவரி 27, 2008] இந்தக் கணிப்பு வெளியாகி [கட்டுரை 1993 எழுதப்பட்டது] 24 ஆண்டுகள் முடிந்துவிட்டன.


இன்னும் 13 ஆண்டுகளில் தமிழ்நாடு தனியாகப் பிரிய வேண்டும். இது சாத்தியமா?

“சாத்தியமே” என்று நான் சொல்ல மாட்டேன். சொன்னால்.....

அடுத்த என் பதிவு வெளிவருவதற்கான சாத்தியமே இல்லாமல் போய்விடும்!!!

நீங்கள் சொல்லலாம்..........

 உங்கள் மனதுக்குள்! எத்தனை முறை வேண்டுமானாலும்!!