அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 29 மார்ச், 2014

என் ‘கற்பனைக் கதை’க்கு ‘உயிர்’ கொடுத்த ஆனந்த விகடனுக்கு நன்றி!

18.03.2014 இல் ‘.....இவ்வாறாகக் கடவுள் காப்பாற்றப்படுகிறார்!!! என்னும் [http://kaamakkizaththan.blogspot.com/2014/03/blog-post_6552.html] தலைப்பில் ஒரு கதை எழுதியிருந்தேன்.

தீராத நோய்க்கு ஆளான ஓர் இளைஞன்,  “சாவை விரட்டியடிக்கணுங்கிற வெறியோட, தினமும் ஒரு மணி நேரம் வலியைப் பொறுத்துட்டு ஓடினேன்; உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி எல்லாம் பண்ணினேன். ‘நான் வாழ்வேன்...வாழ்ந்துகாட்டுவேன்’ என்று சபதம் மேற்கொண்டேன். போராடி வென்றேன்; குணமடைந்தேன்” என்று தன் நண்பனிடம் கூறுவதான ஒரு காட்சியை உள்ளடக்கிக் கதை பின்னியிருந்தேன்.

இன்று காலையில், பழைய பருவ இதழ்களில் சிலவற்றை நுனிப்புல் மேய்ந்த போது, கண்ணில் பட்ட ஓர் இளைஞரின் ‘அசுர சாதனை’ பற்றிய செய்தி [விகடன் 24.08.2003] நான் செய்த கற்பனைக் கதைக்கு உயிரூட்டுவதாக இருப்பது கண்டு மனம் சிலிர்த்தேன். 

உங்களுடன் பகிர்ந்துகொள்ளும் அதீத ஆர்வம் காரணமாக அதைக் கீழே பதிவு செய்திருக்கிறேன்.

தவறாமல் படியுங்கள்; இயன்றால் பிறருடன் பகிருங்கள்.



விகடன்:      ஆம்ஸ்ட்ராங்கின் கதை தெரியுமா உங்களுக்கு? 
                                       [சுருங்கிய வடிவம்]

மீபத்தில், சைக்கிள் ஓட்டுவதில் தொடர்ந்து ஐந்தாவது முறையாகச் சாம்பியன் ஆகி உலக சாதனை படைத்தவர் ஆர்ம்ஸ்ட்ராங். அவர் ஒரு கான்ஸர் நோயாளி.

‘இது தேறாத கேஸ்’ என்று டாக்டர்களால் கைவிடப்பட்ட ஆசாமி இவர்!

அந்த நோயைப் போராடி  ஜெயித்து, அதிலிருந்து மீண்டு, உலக சாதனை படைப்பதென்பது சாதாரணமா என்ன? அதன் பின்னேதான் எத்தனை எத்தனை ரணங்கள்!

குடும்பச் சூழ்நிலை, ஆம்ஸ்ட்ராங்கை விளையாட்டு மைதானத்துக்கு விரட்டியது. டிரையத்லான் போட்டிகளில் பிரபலம் ஆகியிருந்தும் அதைப் புறக்கணித்து சைக்கிள் போட்டிகளில் மட்டும் கவனம் செலுத்தினார்.

அடுத்தடுத்து, பத்து டைட்டில்களை வென்ற நிலையில், அவரது மூளையையும் நுரையீரலையும் புற்று நோய் தாக்கியது. கீமோதெரப்பி சிகிச்சையின் விளைவாக அவர் உடல் பலவீனம் ஆனது. ஐந்து மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்தார்.

எதிர்பாராத நிலையில், உத்வேகம் பெற்ற ஆர்ம்ஸ்ட்ராங் மீண்டும் தீவிர பயிற்சியில் ஈடுபடலானார்.

21 நாட்கள் நடைபெறும் Tour de France போட்டியில் கலந்துகொள்ளப் போவதாக அறிவித்தார்.

அந்தப் போட்டியில் பங்கு பெறுவதே பெரிய விசயம். கிட்டத்தட்ட பிரான்ஸ்ஸையே ஒரு சுற்றுச் சுற்றி, 2130 மைல் சைக்கிள் ஓட்ட வேண்டும். செங்குத்தான மேடு, கிடுகிடு பள்ளம் என கடுமையான பாதைகளைக் கடக்க வேண்டும். இதில் பங்கேற்று, கீழே விழுந்து கைகால்களை முறித்துக்கொண்டவர்கள், உயிரை இழந்தவர்கள் ஏராளம்!

ஆர்ம்ஸ்ட்ராங் அதிகம் ரிஸ்க் எடுப்பதாக டாக்டர்கள் சொன்னார்கள்.சக வீரர்கள் எச்சரிக்கை செய்தார்கள்.

அத்தனையையும் மீறி, போட்டியில் கலந்துகொண்டார் ஆர்ம்ஸ்ட்ராங்; வெற்றியும் பெற்றார்!

“நான் சைக்கிள் சாம்பியன் ஆவதற்காகவே பிறந்தவன். புற்று நோய் வந்துவிட்டால் வாழ்க்கையே முடிந்துவிட்டதாகப் பலரும் வீட்டுக்குள் முடங்கிவிடுகிறார்கள். அது தவறு.

இந்தப் புற்று நோய், என் மன உறுதியைப் பல மடங்கு உயர்த்தியது. நான் வெற்றியாளனாகத் திகழ்வதற்கு இதுதான் காரணம்” என்று உறுதிபடச் சொல்கிறார் ஆர்ம்ஸ்ட்ராங்.

புற்று நோய் தாக்குவதற்கு முன்பு, ஒரு முறைகூட இந்தப் போட்டியில் இவர் ஜெயித்ததில்லை என்பதுதான் மிகப் பெரிய ஆச்சரியம்!

xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx