எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 25 நவம்பர், 2015

"நன்றி” சொல்லி விடை பெறுபவர் ‘பசி’பரமசிவம்!

2011இல் தொடங்கி இந்நாள் வரை வலைப்பதிவில் எழுதி நான் சாதித்தது ஏதுமில்லை. 

எதையெல்லாமோ எழுதினேன். பிறருக்குப் பயன் விளைந்ததோ இல்லையோ, என் பொழுது கழிந்தது.

இன்றுடன் எழுதுவதை நிறுத்துகிறேன். காரணம்..........

சலிப்பு! சலிப்பு மட்டுமே. 

வேறு காரணங்களை நான் ஆராயவில்லை.

என் வலைப்பக்கத்திற்கு வருகை புரிந்து, பதிவுகளை வாசித்து மகிழ்ந்த, மனம் வருந்தினாலும் பெருந்தன்மையுடன் என்னை மன்னித்த அனைத்து நண்பர்களுக்கும்  மனம் நெகிழ்ந்த நன்றிகள்.

நன்றி! நன்றி!! நன்றி!!!



1 கருத்து: