எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

புதன், 25 நவம்பர், 2015

"நன்றி” சொல்லி விடை பெறுபவர் ‘பசி’பரமசிவம்!

2011இல் தொடங்கி இந்நாள் வரை வலைப்பதிவில் எழுதி நான் சாதித்தது ஏதுமில்லை. 

எதையெல்லாமோ எழுதினேன். பிறருக்குப் பயன் விளைந்ததோ இல்லையோ, என் பொழுது கழிந்தது.

இன்றுடன் எழுதுவதை நிறுத்துகிறேன். காரணம்..........

சலிப்பு! சலிப்பு மட்டுமே. 

வேறு காரணங்களை நான் ஆராயவில்லை.

என் வலைப்பக்கத்திற்கு வருகை புரிந்து, பதிவுகளை வாசித்து மகிழ்ந்த, மனம் வருந்தினாலும் பெருந்தன்மையுடன் என்னை மன்னித்த அனைத்து நண்பர்களுக்கும்  மனம் நெகிழ்ந்த நன்றிகள்.

நன்றி! நன்றி!! நன்றி!!!



1 கருத்து: