அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 26 நவம்பர், 2017

யார் 'இந்த' மகா.....பெரியவர்?

மன்னார்குடி.

அது தன்மான இயக்கத்தின் தொடக்க காலம்.

பெரியதொரு பொதுக்கூட்டத்தில் 'அவர்' பேசிக்கொண்டிருந்தார்.

மேடைக்குக் கீழே அமர்ந்திருந்த ஒருவர், தாள்களில் பென்சிலால் எழுதிய கேள்விகளைப் பேச்சாளருக்கு அனுப்பிக்கொண்டே இருந்தார். பேச்சாளரும் சளைக்காமல் பதில் சொல்லிக்கொண்டே இருந்தார்.
அனாவசியக் கேள்விகளால் சொற்பொழிவுக்கு இடையூறு நேர்வதைச் சகிக்காத பார்வையாளர்கள், மனம் கொதித்துக் கேள்விகள் எழுப்பியவரைச் சாட முற்பட்டார்கள்.

சொற்பொழிவாளரோ, அவர்களை அமைதிப்படுத்தியதோடு அல்லாமல், கேள்வி எழுப்பியவரை மேலும் தொடருமாறு மரியாதையுடன் வேண்டிக்கொண்டார்.

அந்த நபரும் தொடர்ந்து கேள்விகளை எழுதி அனுப்பிக்கொண்டிருந்தார்; பேச்சாளரும் பதில் தந்துகொண்டிருந்தார்.

ஒரு கட்டத்தில்.....

கேள்வியாளரின் பென்சில் உடைந்துவிட்டது.

செய்வதறியாது திகைத்த அவரை அழைத்து, "அய்யா, இதனால் எழுதுங்கள்" என்று சொல்லித் தம்மிடமிருந்த பேனாவை அவரிடம் தந்தார் பேச்சாளர்.

எதிர்பாராத இந்த நிகழ்வால் பெரிதும் மனம் நெகிழ்ந்த அந்த நபர் பேனாவைத் திருப்பித் தந்துவிட்டு, "நாயக்கர்வாள், என்னை மன்னிக்க வேண்டும். எதிரிகள் தங்களைப் பற்றிக் கூறுவது முற்றிலும் தவறு. நீங்கள் மகாப் பெரியவர். நமஸ்காரம்" என்றார்.

கேள்வியாளர் ஒரு பிராமணர்[அய்யர்].

அவரால் "நீங்கள் மகாப் பெரியவர்" என்று பாராட்டப்பட்டவர் சக அரசியல்வாதிகளால் 'நாயக்கர்' என்று அழைக்கப்பட்ட 'பெரியார் ஈ.வெ.ரா' ஆவார். நூலில்[பெரியாரின் பெண்ணுரிமை'] 'வே'என்று தவறாக அச்சாகியுள்ளது.
=====================================================================================
பெரியாரை 'மகாப் பெரியவர்' ஆக்கிய இன்னுமொரு நிகழ்வு பிறிதொரு பதிவில்! 
====================================================================================
நன்றி: 'பெரியாரின் பெண்ணுரிமை[என்.டி.சுந்தரவடிவேலு], மணி புத்தக நிலையம், விழுப்புரம். பதிப்பு ஆண்டு: 2013.