அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 10 நவம்பர், 2018

'அது' விசயத்தில் அரைச் சதம் அடித்த ஆன்மிகச் சாமியார்!!!

'ஆன்மிகத் தலைவர் நான்' என்று தன்னைத்தானே அழைத்துக்கொண்ட தோடு, 'பிரசன்ன வெங்கடாச்சாரியார் சதுர்வேதி' என்று பெயரையும் மாற்றிக்கொண்ட இவரின் இயற்பெயர் வெங்கடசரவணன் என்பதாகும்.

படத்தை மீண்டும் ஒரு முறை உற்றுப்பாருங்கள். தெய்வீகக்கலை சொட்டுகிறதுதானே?

இவர் சாதிக்கப் பிறந்தவர். எதில்?

நாடிவரும் பக்தைகளில் அழகுப் பெண்களைத் தேர்வு செய்து, வசியப்படுத்தி உடலுறவு கொள்வதில் சாதனை படைத்திருக்கிறார்.  ஆம், 48 வயதே ஆன இந்த ஆன்மிகச் சாமியார், 50 பக்த கன்னிகளை[எண்ணிக்கை முழுமை பெறவில்லை] அனுபவித்திருக்கிறார்.

மாந்திரீகம் மூலம், தன்னைத் தேடிவரும் பக்தைகளை வசியம் பண்ணுவதில் இவர் கில்லாடியாம்.

ஆழ்வார்ப்பேட்டை, டி.டி.கே. சாலையைச் சேர்ந்த சுரேஷ் என்பவரின் மனைவியை மட்டுமல்லாது, அவரின்  இரண்டு மகள்களையும் வசியம் பண்ணிப் புணர்ச்சி இன்பம் அனுபவித்தாராம்.

தட்டிக்கேட்ட சுரேஷை வெளியே தள்ளி, கதவை உட்புறமாய்த் தாளிட்டு லீலையைத் தொடர்ந்தார் என்றால் சாமியார் எப்பேர்ப்பட்ட ஆசாமி என்பதும் சுரேஷ் எத்தனை இளிச்சவாயன் என்பதும் புரியும்.

பெண்டாட்டியையும் பெற்ற மகள்களையும் பறிகொடுத்த ஏமாளி சுரேஷ், பல லட்சம் ரூபாயையும் இந்த அலேக் சாமியிடம் கோட்டை விட்டாராம்.

சுரேஷ் அளித்த புகாரின் பேரில் காவல்துறை சதுர்வேதியைக் கைது செய்தது. பிணையில் வெளிவந்த ஆன்மிக வேடதாரி, சுரேஷின் பெண்டாட்டியோடு பெண்களையும் கடத்திக்கொண்டு தலைமறைவானதாக ஊடகங்கள் பரபரப்புச் செய்தி வெளியிட்டன.

மகளிர் நீதிமன்றம், சதுர்வேதியைத் தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளது. இந்த ஆன்மிகச் சூத்ரதாரி வடமாநிலங்களில் ஆன்மிகச் சொற்பொழிவு ஆற்றி வருவதாகக் கிடைத்த தகவலின் பேரில், மத்திய குற்றப்பிரிவுக் காவல்துறையின் தனிப்படை வட மாநிலங்களுக்கு விரைந்துள்ளது என்பது இப்போதைய செய்தி.

விரைவில் இந்தப் பெண் பொறுக்கி கைது செய்யப்படக்கூடும். நீதி மன்ற விசாரணைக்குப் பிறகு சிறைத்தண்டனை பெறவும்கூடும்.

இவருக்கு முன்பே, மாந்திரீகம் செய்து வசியம் பண்ணிக் கற்பழிப்பில் சாதனை புரிந்த சாமியார்கள் எல்லாம் கம்பி எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலை தொடர்ந்தால்.....

மாந்திரீகக் கலையும் 'வசியம் செய்தல்' கலையும் வளர்த்தெடுக்க ஆளில்லாமல் அழிந்துபோகுமே!

கற்பழிப்பில், அரைச்சதமும் முழுச்சதமும் போடப் போலிச் சாமியார்கள் இல்லாத நிலை[பல சதங்கள் அடித்து உலக சாதனைகள்கூட நிகழ்த்துவார்கள்] உருவாகுமே!

இதைத் தவிர்ப்பதற்கான வழிதான் என்ன?

ஒட்டுமொத்தச் சமுதாயமும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுத்தல் வேண்டும்.

ஹி...ஹி...ஹி!!!