எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 28 டிசம்பர், 2018

இனி, தமிழ்நாட்டுச் சாமிகளுக்கு இந்தியில் 'அர்ச்சனை'!!!

கிறித்தவ மதம் எங்கிருந்தோ இங்கு வந்தது. இங்குள்ள எல்லாத் தேவாலயங்களிலும் கிறித்தவர்கள் தமிழில்தான் வழிபடுகிறார்கள்; சடங்குகள் செய்கிறார்கள். அவர்கள் வணங்குகிற சாமி கோபித்துக்கொள்ளவில்லை.

நம் கோயில்களில் உள்ள மிகப் பெரும்பாலான கல்வெட்டுகள் தமிழில்தான்[காலந்தோறும் எழுத்து வடிவம் மாறியுள்ளது] உள்ளன.

''சாம்போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் -எந்தன்
சாம்பலும் தமிழ் மணந்து வேகவேண்டும்'' என்றார் பாவேந்தன் பாரதிதாசன்.

நாம் பேசுவதும் எழுதுவதும் தமிழில்தான்.  உலக அளவில், மொழி அறிஞர்களால் பாராட்டப்பட்டது இம்மொழி. 

இம்மொழியில் கோயில்களில் அர்ச்சனை செய்தால் சாமிகளுக்குக் கோபம் வருமா? சாபம் கொடுக்குமா?

இன்னும் எத்தனை காலத்துக்கு, சமஸ்கிருதம் தேவ பாஷை என்று புளுகப்படுவதை நம்பி மூடனாகவே வாழப்போகிறான் தமிழன்? 

இவனின் இந்தச்  சூடுசொரணை கெட்ட அவலநிலை நீடித்தால்.....

இந்தி இந்தியாவின் பெரும்பான்மையினர் பேசும் மொழி. எங்கும் இந்தி எதிலும் இந்தி எனும் நிலை உருவாகிவருகிறது. இந்தி நாட்டை...மன்னியுங்கள், இந்தியநாட்டை ஆளுகிறவர்களுக்கு இந்தியே பிடித்த மொழி. சாமிகளுக்குப் பிடிக்கிறதோ இல்லையோ, இனி 'இந்தி'யாவிலுள்ள அனைத்துக் கோயில்களிலும் இந்தியில்தான் மந்திரம் சொல்லப்படுதல் வேண்டும் என்றொரு ஆணை பிறப்பிக்கப்படும் நாள் வெகு தொலைவில் இல்லை. ஆக.....

சமஸ்கிருதத்தின் இடத்தை இந்தி கைப்பற்றவிருக்கிறது[நகைக்காதீர்கள். இதுவும் நடக்கும்]. தமிழ்.....

நம் அரசியல்வாதிகளுக்கான 'மேடை மொழி'யாக என்றென்றும் நீடிக்கும். ஹ...ஹ...ஹ...!!!

வாழ்க தமிழ்! வெல்க தமிழ்!!
------------------------------------------------------------------------------------------------------------------
அமேசான் கிண்டிலில் நான் படைத்த 07 நூல்கள்:
சிரிக்கச் சிரிக்கச் சிரிப்பு வருது!: புத்துணர்ச்சிக் கதைகள் (Tamil Edition)

காமம் பொல்லாதது: பாலுணர்வுச் சிறுகதைகள் (Tamil Edition)ஓடி ஒளியும் ஆன்மாவும் தேடி அலையும் மனிதகுலமும் (Tamil Edition)


கடவுள்?.....ஊஹூம்!: தற்சார்பற்ற சுயசிந்தனைப் பதிவுகள் (Tamil Edition)
பத்து ரூபாயில் கடவுள்: சிறுகதைகள் (Tamil Edition)அடடா இந்தப் பெண்கள்!!!: சிலிர்ப்பூட்டும் சிறுகதைகள் (Tamil Edition)
100% உண்மைக் கதைகள்: சிறுகதைகள் (Tamil Edition)