எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 10 ஏப்ரல், 2019

இவர்கள் செத்துப் பிழைக்கிறார்கள்?!?!

ஓரிரு நாட்களுக்கு முன்பு செய்தித்தாளொன்றில் பார்த்த இந்தப் படக்காட்சி என்னைக் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. 

ஒருவரின் நோய் குணமானால், உயிர் இருந்தும் அவரைப் பிணமாகக் கிடத்தி, பிணத்திற்குச் செய்ய வேண்டிய அத்தனை சடங்குகளையும் செய்வதாக நேர்ந்துகொள்ளும் பழக்கம் சேலம் மாவட்டத்தில் சில பகுதிகளில் நிலவுகிறதாம்.

நோய் குணமான பின்பு நேர்த்திக்கடன் நிறைவேற்றப்படுகிறது.

சடங்கின் இறுதியில் சேவல் பலிகொடுக்கப்படுகிறது[அது கடந்த பிறவியில் மனிதனாகப் பிறந்து இப்படி நேர்ந்துகொண்டு ஒரு சேவலைப் பலி கொடுத்திருக்குமோ?!].

உண்மையில் இந்த நேர்த்திக்கடனால் நோய் குணமாவது நம்பத்தக்கது அல்ல என்றாலும், உயிரோடு நடமாடும் ஒருவன், தன்னை உயிரற்ற பிணமாகச் சில மணி நேரங்கள் கருதிக்கொள்வதால், அகம்பாவம் அகன்று தன்னடக்க உணர்வு மேலோங்குமோ?!

சிரிக்க வேண்டாம்; சிந்தியுங்கள்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக