எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

புதன், 24 ஏப்ரல், 2019

புதிய உயிரினங்களின் தோற்றத்திற்கான 'காலவரம்பு' என்ன?

பரிணாம வளர்ச்சி காரணமாகவே உயிரினங்கள் பல்கிப் பெருகின என்றார் அறிவியல் அறிஞர் டார்வின்.

''இந்தப் பரிணாம வளர்ச்சி என்பது ஒரு தொடர் நிகழ்வு எனில், இதனால் புதிய புதிய உயிரினங்கள் தினம் தினம் தோன்றிக்கொண்டே இருக்கின்றனவா?'' -இப்படியொரு சந்தேகம் நம் போன்றவர்களுக்கு எழுவது இயல்பு. விஞ்ஞானிகளின் பதில்.....

''இல்லை'' என்பதே.

''பரிணாம வளர்ச்சி என்பது குறைவான கால அளவில் நிகழ்வதில்லை. அதாவது, சில ஆண்டுகளிலோ சில நூறு ஆண்டுகளிலோ நடைபெறுவதல்ல; மிகப் பல ஆயிரம் ஆண்டுகளிலான படிப்படியான வளர்ச்சிக்குப் பின்னரே புதிய உயிர்கள் தோன்றுகின்றன. ஆகவே....

நாம் வாழும் காலத்தில் ஒரு புத்தம் புதிய உயிரினம் தோன்றியிருப்பதைக் கண்டறிவது அத்தனை எளிதல்ல'' என்கிறார்கள், அனைத்தும் கடவுளின் படைப்பே என்பதை மறுத்துரைக்கும் அறிவியல் பேரறிஞர்கள்.
=================================================================================
நன்றி: 'உயிர்கள்', New Horizon Media Pvt. Ltd, Alwarpet, chennai, 600 018.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக