பக்கங்கள்

சனி, 20 ஜூலை, 2019

திருமணங்களும் திசைமாறும் பெண்களும்!!!

‘அமெரிக்கன் டைம் யூஸ் சர்வே’ என்னும் அமைப்பு, திருமணம் ஆன, ஆகாத, விவாக ரத்து ஆன, கணவனை இழந்த என்று பலதரப்பட்ட பெண்களைச் சந்தித்து, அவர்களின் வாழ்க்கை நிலை குறித்தான கருத்துகளைத் திரட்டியது. இந்த ஆய்வை அடிப்படையாகக் கொண்டு ‘HAPPY EVER AFTER' என்னும் நூலை எழுதியிருக்கிறாராம் ‘டோலன்’ என்பவர்.

பெண்களில் மேற்குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த பெண்கள் நாம் நினைப்பது போல சுகபோகமாக வாழ்பவர்கள் அல்ல; சோகம் சுமப்பவர்கள் என்கிறார் இந்த நூலாசிரியர்.

திருமணம் ஆன ஆண்களால் தாம் செய்யும் தொழிலில் அதிகம் கவனம் செலுத்த முடிகிறது. ஆனால், பெண்களின் நிலை அவ்வாறு அல்ல; “பெண்ணாகப் பிறந்தால் கல்யாணம் செய்துக்கணும், பிள்ளை பெத்துக்கணும்” என்று ஆதிகாலத்திலிருந்தே தங்களை ஆண்கள் அடக்கி வைத்திருப்பதாகப் பெண்கள் கருதுகிறார்கள் என்கிறார் நூலாசிரியர்.

கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்ட பெண்களில் 60% பேர், கல்யாணம் செய்துகொள்ளவும் குழந்தை பெற்றுக்கொள்ளவும் விரும்பவில்லை என்று தெரிவித்திருக்கிறார்களாம்.

இனி, ஆண்கள் பாடு திண்டாட்டம்தான். ஹி...ஹி...ஹி!!!


'மல்லிகை’க்கு நன்றி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக