அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 3 பிப்ரவரி, 2020

தமிழைப் போற்றும் நீதிபதியைப் பாராட்டுகிறோம்!

தஞ்சைப் பெரிய கோயிலில் 05.02.2000இல் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் மந்திரங்கள் ஓதப்பட்டுக் குடமுழுக்கு நடைபெற்வுள்ள நிலையில்,.....

“குடமுழுக்கில் தமிழ் மட்டுமே ஒலிக்க வேண்டும்” என்று தமிழ் விடுதலைக் கொற்றத்தின் மாநிலத் தலைவர் வியனரசுவும், தங்கராஜ் என்னும் தமிழ்ப் பற்றாளரும் ராஜராஜ சோழன் சிலை முன்பு உண்ணாவிரதம் இருக்க முயன்றனர்.

அவர்களைக் கைது செய்த காவல்துறையினர், தஞ்சை குற்றவியல் நீதிமன்றம் 1இன் நீதிபதியிடம் முன்னிலைப்படுத்தினர். பின்னர் நடந்ததை வியனரசு கூறுகிறார்:
#சட்டம் ஒழுங்கைக் கெடுக்க முயன்றதாகவும், பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும்,  மறியல் செய்ததாகவும் எங்கள் மீது வழக்குப் பதிந்து கைது செய்து நீதிபதி முன்னால் ஆஜர்படுத்தினார்கள் காவல்துறையினர்; 15 நாட்கள் எங்களைக் காவலில் வைக்க வேண்டும் என்றார்கள்.

'நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கும் நிலையில் ஏன் போராட்டம் நடத்தினீர்கள்?' என்று நீதிபதி கேட்டார்.

'குடமுழுக்கு முழுமையாகத் தமிழில் மட்டுமே நடத்தபட வேண்டும் என்பதற்காகத்தான்' என்றோம்.

'குடமுழுக்கு முடியும்வரை போராட்டம் நடத்த மாட்டோம் என்று எழுதிக் கொடுங்கள்' என்றார். கொடுத்தோம். நீதிபதி தம் பொறுப்பில் எங்களை ஜாமீனில் அனுப்பினார்.

அத்துடன், 'தமிழ்மொழிக்காகத்தானே போராட்டம் நடத்துறாங்க; முழக்கம் செய்யுறாங்க. இதற்கெல்லாமா 15 நாட்கள் ரிமாண்ட் செய்வது?' என்று காவல்துறையினரை நீதிபதி கடிந்துகொண்டார்.’#

நம் தாய்மொழியாம் தமிழுக்கு மரியாதை செலுத்திய நீதிபதி அவர்களை மிக்க மகிழ்வுடன் பாராட்டுகிறோம்.

தாய்த் தமிழுக்காகப் போராடிய தலைவர் வியனரசு, தங்கராஜ் ஆகியோருக்கும், செய்தி வெளியிட்ட விகடனுக்கும்[vikatan.com], இதைப் பதிவிட்ட கே.குணசீலன் அவர்களுக்கும் நம் நன்றிகள்.
========================================================================