எனது படம்
கடவுள் குறித்த ஆய்வுரைகளோ, மூடநம்பிக்கைச் சாடல்களோ, என் பதிவுகளின் உள்ளடக்கங்களின் தரம் எனக்கு வாய்த்துள்ள அறிவுக்கும் மனப் பக்குவத்துக்கும் ஏற்பவே அமையும். அவற்றை ஏற்பதும் மறுத்துப் புறக்கணிப்பதும், ஆறறிவும் ஆழ்ந்து சிந்திக்கும் திறனும் வாய்க்கப்பெற்ற உங்களின் விருப்பம் சார்ந்தது.

சனி, 14 மார்ச், 2020

ஓட்டைக்குள் ஒளி புகுவது ஓர் அதிசயமா?!

மதுரை முத்தீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2ஆவது வாரத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் கருவரைக்குள் பிரவேசிக்குமாம். இது ஒரு செய்தின்னு இந்தப் பத்திரிகைக்காரனுங்க வெளியிடுறானுங்க.

வான்வெளியில் சூரியன் பயணிக்கும் பாதையில் ஏற்படும் மாறுதல் காரணமாகவும் துவாரத்தின் வடிவமைப்புக்கு ஏற்பவும், இந்தக் காலக்கட்டத்தில் மட்டும் கருவறைக்கு எதிரே உள்ள துவாரங்கள் வழியாகச் [கருவறைக்குள்]சூரிய ஒளி புகுகிறது.

இதில் என்ன அதிசயத்தைக் கண்டார்கள் இவர்கள்?!
இதுக்குச் சிறப்பு அபிசேக ஆராதனையெல்லாம் நடந்துதாம். வந்து குவிந்த பக்தகோடிகள் ஒளியை வழிபட்டு ஆனந்தப் பரவசம் எய்தினார்களாம்.

இவர்கள் இப்போதைக்குத் திருந்த மாட்டார்கள்; திருத்தவும் முடியாது!
================================================