எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 14 மார்ச், 2020

ஓட்டைக்குள் ஒளி புகுவது ஓர் அதிசயமா?!

மதுரை முத்தீஸ்வரர் கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 2ஆவது வாரத்தில் சூரிய ஒளிக்கதிர்கள் கருவரைக்குள் பிரவேசிக்குமாம். இது ஒரு செய்தின்னு இந்தப் பத்திரிகைக்காரனுங்க வெளியிடுறானுங்க.

வான்வெளியில் சூரியன் பயணிக்கும் பாதையில் ஏற்படும் மாறுதல் காரணமாகவும் துவாரத்தின் வடிவமைப்புக்கு ஏற்பவும், இந்தக் காலக்கட்டத்தில் மட்டும் கருவறைக்கு எதிரே உள்ள துவாரங்கள் வழியாகச் [கருவறைக்குள்]சூரிய ஒளி புகுகிறது.

இதில் என்ன அதிசயத்தைக் கண்டார்கள் இவர்கள்?!
இதுக்குச் சிறப்பு அபிசேக ஆராதனையெல்லாம் நடந்துதாம். வந்து குவிந்த பக்தகோடிகள் ஒளியை வழிபட்டு ஆனந்தப் பரவசம் எய்தினார்களாம்.

இவர்கள் இப்போதைக்குத் திருந்த மாட்டார்கள்; திருத்தவும் முடியாது!
================================================