செவ்வாய், 26 மே, 2020

சமஸ்தான மன்னர்களின் ‘சல்லாப’ வாழ்க்கை![சில துளிகள்]

ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்டபோது, 565 சமஸ்தானங்களை[விக்கிப்பீடியா] மட்டும் பொம்மை அரசர்களை[ஆங்கிலேயருக்குக் கப்பம் செலுத்தி ஆண்டவர்கள்] வைத்து நிர்வகித்தார்கள். அந்த அடிமை அரசர்கள், தாம் நடத்திய ஆடம்பர வாழ்க்கையில் செய்த அட்டூழியங்கள் மனம் பதற வைப்பவை; அனுபவித்த சுகபோகங்கள் விவரிப்புக்கு அப்பாற்பட்டவை. எடுத்துக்காட்டாக.....

*காலஞ்சென்ற ஜோத்பூர் மகாராஜா உடலுறவு சுகத்துக்கென்று 3000 பெண்களை வைப்பாட்டிகளாக[அந்தப்புரத்து ராணிகள்] வைத்திருந்தார்.

*தன் அந்தப்புரத்தில் வெறும் 200 அழகிகள் மட்டுமே இருப்பதாக நிஜாம் வருத்தப்படுவதுண்டாம்.

*‘நீர் உமது கடிதத்தில் குறிப்பிட்டிருந்த அந்த இரண்டு ‘உருப்படி’களும் பேரழகிகள் என்று கேள்விப்பட்டேன். நீர் என்னுடைய விசுவாசம் மிக்க சேவகர் என்பதால் உடனடியாக அவர்களை என்னிடம் கொண்டுவந்து சேர்க்கவும்’ -இது தன் அதிகாரத்துக்கு உட்பட்ட ஒரு திவானுக்கு ஒரு மன்னர் எழுதிய கடிதம்.

*ஒரு சமஸ்தான அந்தப்புரத்தில், வெகு அழகான அடிமைப் பெண் ஒருத்தி இருந்தாள். பிரமிக்க வைக்கிற அழகு. மயங்கினார் மன்னர். தடை ஏதுமின்றி இன்பசாகரத்தில் மூழ்கித் திளைத்தார்.

மன்னரின் மனைவிகளுக்கும் வைப்பாட்டிகளுக்கும் அது பிடிக்கவில்லை. அந்த அடிமைப் பெண் மீது அடுத்தடுத்துத் திருட்டுப் பழி சுமத்தினார்கள். ஒரு கட்டத்தில் மன்னரும் நம்பிவிட்டார். குற்றத்தை ஒப்புக்கொள்ளும்படி அவளை மிரட்டினார். அவள் ஒத்துக்கொள்ளவே இல்லை.

வெகுண்ட மன்னர், குடித்துவிட்டுப் பலவகையிலும் பாலுறவு வக்கிரங்களைக் கையாண்டு  அவளைப் புணர்ந்தார். இப்படிப் புணர்வது தொடர்ந்த நிலையில் ஒரு நாள் அந்த அழகிய அடிமைப் பெண் மடிந்துபோனாள்.

அந்தப்புரங்களில் நடக்கும் அட்டூழியங்களுக்குச் சாட்சியங்கள் கிடைப்பதில்லை என்பதால் ஆங்கில அரசு இவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

*சமஸ்தான மன்னர்கள், கவர்ச்சிக் கன்னிகளுடன் நடத்திய ‘ஜலக்கிரீடை’ சரித்திரப்புகழ் பெற்றது.

*அன்று, பெரும்பாலான மன்னர்கள், வாழை இலையில்தான் சாப்பிடுவார்கள்.  அந்த இலையின் கீழ் தங்கம் அல்லது வெள்ளியால் ஆன தட்டு இருக்கும்.

*சில மன்னர்கள் கடவுள் விக்கிரகங்களுக்கு போடப்படுவதை விடவும் அதிக அளவிலான ஆபரணங்கள் போட்டுக்கொள்வார்கள். ஒருவர், 1.5 கோடி ரூபாய் மதிப்பிலான நகைகள் அணிவதையும் ஆடைகள் உடுத்துவதையும் வழக்கமாகக் கொண்டிருந்தாராம். அதற்கான சிறு பட்டியல்.....

1] 334 வைரக் கற்கள் பதித்த கோட்டு.

2] 172 மரகதக் கற்களும் 1742 வைரக் கற்களும் பதிக்கப்பட்ட பாட்ஜுகள் [தோளில் அணிவது].

3] 8619 முத்துக்களும் 54 மரகதக் கற்களும் 27 மாணிக்கங்களும் பதிக்கப்பட்ட கச்சை[ பெல்ட்].

4] 450 வைரக் கற்கள் பதிப்பிக்கப்பட்ட கடிகாரம்.

5] 596 முத்துக்களும், 612 வைரக் கற்களும், 26 மாணிக்கங்களும், 48 மரகதக் கற்களும் பதிப்பிக்கப்பட்ட ஆடைகள்.

*அயலாருக்கு விருந்தளிக்க நேரின் அவர்களுடன் உடனமர்ந்து உண்ண மாட்டார்கள் மன்னர்கள்.

*உறவினர் அல்லாதவருடன்[அயலார்] உரையாட நேர்ந்தால், பின்னர் ‘தீட்டு’ நீங்குவதற்காகக் குளித்துவிடுவது அவர்களின் வழக்கமாக இருந்தது. -தினமணி கதிர்[30.06.1996] கட்டுரை
                                             
                                           *                           *                       *

*ராஜபுத்திர சமஸ்தானம் அல்வார் பகுதியை ஆண்ட, ஜெய்சிங் தன் அரசவையில் இருக்கும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளும் தன்னைப் போலவே உல்லாசம் விரும்பிகளாக இருக்க வேண்டும் என்று எண்ணுவார். அதற்காக, அடிக்கடி விருந்து, கேளிக்கைகளை ஏற்பாடு செய்வார். தன் பட்டத்து மகாராணியைத் தவிர, மற்ற அந்தப்புரத்து ராணிகளை, மற்றவர்களுக்கு விருந்தாக்கவும் முன் வருவார்.

எனவே, விருந்து என்றவுடன், அமைச்சர்கள் உட்பட, தளபதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் தவறாமல் ஆஜராகி விடுவர்.  -தினமலர்
https://www.dinamalar.com/supplementary_detail.asp?id=49955&cat=2&Print=1
========================================================================