அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 6 மே, 2020

இசைஞானி, ஒரு ‘தத்துப்பித்து’த் தத்துவ ஞானி!!!



 'தி இந்து' பப்ளிஷிங் குரூப்’புக்காக சுப்ரமணியன் என்பவர் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ஒரு நேர்காணல் மேற்கொண்டார். நேர்காணல் ரமணாசிரமத்தின் வளாகத்தில் நடைபெற்றது[இந்து தமிழ் நாளிதழ்[06.05.2020]. 
https://www.hindutamil.in/news/blogs/553093-ilaiyaraja-interview-about-ramana-maharishi.html
நேர்காணலில் இந்த இசைமேதை, திருவண்ணாமலை ரமணர் குறித்து உதிர்த்த கருத்துகளின்[தத்துவங்கள்] சாராம்சத்தைச் சில வரிகளில்[ஒன்றன் பின் ஒன்றாக] உங்கள் முன் வைக்கிறேன். கூடவே அவற்றிற்கான என் விமர்சனமும்.
ஞானி: “பகவான் ரமணர் என்பவருக்குத் தேகம் என்பது கிடையாது. பிற யோகிகள், சித்தபுருஷர்களுடன் பகவானை ஒப்பிட முடியாது. அவர் எப்போது ஞானத்தை அடைந்தாரோ, அந்தத் தருணத்திலிருந்தே அவர் தன் தேகத்தில் வாழவில்லை. பகவான் அவரது உடலாக இல்லை”
நான்: தேகத்துடன் வாழாமல் சூக்கும சரீரத்துடன் வாழ்ந்தாரா? உண்டது, தின்றது, பேண்டது எல்லாமே சூக்கும சரீரத்துடன்தானா? அந்தச் சரீரத்தைத்தான் நீர் அவ்வப்போது தரிசனம் பண்ணினீரா? உளறுவதற்கு ஒரு வரம்பே இல்லையா ராசா?
ஞானி: “பகவான் 16 வயதில், தன்னறிவை எட்டிய பின்னர், ஒரு நொடிகூட அவர் அடைந்த ஞானத்திலிருந்து வழுவவேயில்லை”
நான்: அதென்ன ஞானம்? மனதைத் தொட்டுச் சொல்லும், அதைப்பற்றி ஒரு நூறு சொற்களில் உம்மால் விளக்கம் தர முடியுமா? அவரை ஞானி என்கிறீர். ஒருவர் ஞானி[?] ஆயிட்டா அவர் அப்புறம் எப்பவும் ஞானிதான். வழுவுறது ஏது?
இசை ஞானின்னு பேர் வாங்கினதிலிருந்து[நீர் இந்தப் பட்டத்துக்குத் தகுதி உடையவர்தான்] உம்மை நீரே தத்துவ ஞானின்னு கற்பனை செய்ய ஆரம்பிச்சுட்டீர். மனம் போன போக்கில் நீர் பிதற்றுவதற்குக் காரணம் இதுதான். 
ஞானி: “நான் யார்?” என்ற கேள்வி மற்ற துறவிகளின் வாழ்க்கையில் எழவே இல்லை.
நான்: ஒருவரைத் துறவி ஆக்குகிற முதல் கேள்வியே இந்த “நான் யார்?”தான். இந்த மண்ணில் வாழ்ந்த துறவிகளைப் பத்தி உமக்கு எதுவுமே தெரியாது. தெரிந்திருந்தால் இப்படிச் சித்தம் கலங்கிப் பேசியிருக்க மாட்டீர்.
ஞானி: பகவான், பகவான் தான். அவர் பரம்பொருள். அவர் சர்வேஸ்வரன்.
நான்: அடப்பாவி மனுசா, மதவாதிகளால் உருவாக்கப்பட்டுப் பெரும்பான்மை மக்களால் வழிபடப்படுகிற அத்தனை கடவுள்களுக்கும் ‘வேட்டு’ வைத்துவிட்டீரே! 
====================================================================