எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 6 மே, 2020

இசைஞானி, ஒரு ‘தத்துப்பித்து’த் தத்துவ ஞானி!!!



 'தி இந்து' பப்ளிஷிங் குரூப்’புக்காக சுப்ரமணியன் என்பவர் இசையமைப்பாளர் இளையராஜாவிடம் ஒரு நேர்காணல் மேற்கொண்டார். நேர்காணல் ரமணாசிரமத்தின் வளாகத்தில் நடைபெற்றது[இந்து தமிழ் நாளிதழ்[06.05.2020]. 
https://www.hindutamil.in/news/blogs/553093-ilaiyaraja-interview-about-ramana-maharishi.html
நேர்காணலில் இந்த இசைமேதை, திருவண்ணாமலை ரமணர் குறித்து உதிர்த்த கருத்துகளின்[தத்துவங்கள்] சாராம்சத்தைச் சில வரிகளில்[ஒன்றன் பின் ஒன்றாக] உங்கள் முன் வைக்கிறேன். கூடவே அவற்றிற்கான என் விமர்சனமும்.
ஞானி: “பகவான் ரமணர் என்பவருக்குத் தேகம் என்பது கிடையாது. பிற யோகிகள், சித்தபுருஷர்களுடன் பகவானை ஒப்பிட முடியாது. அவர் எப்போது ஞானத்தை அடைந்தாரோ, அந்தத் தருணத்திலிருந்தே அவர் தன் தேகத்தில் வாழவில்லை. பகவான் அவரது உடலாக இல்லை”
நான்: தேகத்துடன் வாழாமல் சூக்கும சரீரத்துடன் வாழ்ந்தாரா? உண்டது, தின்றது, பேண்டது எல்லாமே சூக்கும சரீரத்துடன்தானா? அந்தச் சரீரத்தைத்தான் நீர் அவ்வப்போது தரிசனம் பண்ணினீரா? உளறுவதற்கு ஒரு வரம்பே இல்லையா ராசா?
ஞானி: “பகவான் 16 வயதில், தன்னறிவை எட்டிய பின்னர், ஒரு நொடிகூட அவர் அடைந்த ஞானத்திலிருந்து வழுவவேயில்லை”
நான்: அதென்ன ஞானம்? மனதைத் தொட்டுச் சொல்லும், அதைப்பற்றி ஒரு நூறு சொற்களில் உம்மால் விளக்கம் தர முடியுமா? அவரை ஞானி என்கிறீர். ஒருவர் ஞானி[?] ஆயிட்டா அவர் அப்புறம் எப்பவும் ஞானிதான். வழுவுறது ஏது?
இசை ஞானின்னு பேர் வாங்கினதிலிருந்து[நீர் இந்தப் பட்டத்துக்குத் தகுதி உடையவர்தான்] உம்மை நீரே தத்துவ ஞானின்னு கற்பனை செய்ய ஆரம்பிச்சுட்டீர். மனம் போன போக்கில் நீர் பிதற்றுவதற்குக் காரணம் இதுதான். 
ஞானி: “நான் யார்?” என்ற கேள்வி மற்ற துறவிகளின் வாழ்க்கையில் எழவே இல்லை.
நான்: ஒருவரைத் துறவி ஆக்குகிற முதல் கேள்வியே இந்த “நான் யார்?”தான். இந்த மண்ணில் வாழ்ந்த துறவிகளைப் பத்தி உமக்கு எதுவுமே தெரியாது. தெரிந்திருந்தால் இப்படிச் சித்தம் கலங்கிப் பேசியிருக்க மாட்டீர்.
ஞானி: பகவான், பகவான் தான். அவர் பரம்பொருள். அவர் சர்வேஸ்வரன்.
நான்: அடப்பாவி மனுசா, மதவாதிகளால் உருவாக்கப்பட்டுப் பெரும்பான்மை மக்களால் வழிபடப்படுகிற அத்தனை கடவுள்களுக்கும் ‘வேட்டு’ வைத்துவிட்டீரே! 
====================================================================