அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 5 மே, 2020

கிழ வயதில் உடலுறவு!

//சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு, உடலுறவுக்கும் உடல் நலத்துக்கும் தொடர்பு உண்டா என்பதை அறிய, ரஷ்ய விஞ்ஞானிகள் எலிகளை வைத்து[பாவப்பட்ட ஜென்மம்] ஒரு பரிசோதனை நடத்தினார்கள்.

40 எலிகளை, குழுவுக்கு 20 என்ற வகையில் இரண்டாகப் பிரித்தார்கள். ஒரு குழுவை ‘அ’ என்றும் இன்னொன்றை ‘ஆ’ என்றும்  வகைப்படுத்தினார்கள்.

‘அ’வில் உள்ள ஆண், பெண் எலிகளை உடலுறவு கொள்ள இயலாத வகையில் தடுத்து வைத்தார்கள்.

இதற்கு மாறாக, ‘ஆ’வில் உள்ள எலிகளை எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லாமல் முழுச் சுதந்திரத்துடன் இயங்க அனுமதித்தார்கள்.

சிறிது காலம் கழித்து அனைத்து எலிகளையும் பரிசோதித்ததில்.....

‘அ’வைச் சார்ந்த எலிகளை விடவும் ‘ஆ’ எலிகள், உடலுறவு சுகம் அனுபவித்ததால் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததோடு நீண்ட ஆயுளையும் பெற்றிருந்தன.

எனவே,

1.உடலுறவு கொள்வது மனிதர்களுக்கும் மிகவும் நன்மை பயக்கிற செயலாகும்.

2.உடலுறவு அவர்களின் வாழ்நாளை அதிகரிக்கிறது.

3.உடலுறவை வயதுடன் இணைத்துப் பார்ப்பது தேவையற்றது. இதற்கு வயது ஒரு தடையே அல்ல//

இப்படிச் சொல்கிறவர், முதியோர் மருத்துவப் பணிக்காக டாக்டர் பி.சி.ராய் விருது பெற்றவரும், 1978இல் சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் முதியோர் நலப் பிரிவைத் தொடங்கியவரும், முதியோர் மருத்துவத்தின் முக்கியத்துவத்தை நாட்டுக்கு அறிமுகப்படுத்தியவரும், முதியோர்களின் வீடுகளுக்கே சென்று சிகிச்சை அளிக்கும் திட்டத்தைத் தொடங்கியவரும் ஆன டாக்டர் வி.எஸ்.நடராஜன் அவர்கள்.

இவர்தம் பரிந்துரை, அனைத்து வயதுக் கிழவர்களுக்கு மகிழ்ச்சி தரும் என்பதில் சந்தேகமில்லைதான். ஆனால், “சீ...ச்சீ...சீய்... இந்த வயசில் இதெல்லாம் தேவையா?” என்பார்களே, அவர்களுக்கு வாழ்க்கைத் துணைவிகளாக வாய்த்த நம்ம ஊர்க் கிழவிகள்!? 

கிழவர்கள் வேறு வகையில் உடலுறவு சுகம் தேடுவதும் நம் பண்பாட்டுக்கு எதிரானதாயிற்றே!

பாவம் நம்ம ஊர்க் கிழவர்கள்!
========================================================================