அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 6 அக்டோபர், 2020

"ஏண்டா இப்படியெல்லாம் 'வெறி' ஏத்துறீங்க?!?!"

கொரோனா கொடுந்தொற்றை நினைச்சா அடிவயிறு கலங்குது. அந்த அளவுக்கு அது பலிகொள்கிற மனித உயிர்களின் எண்ணிக்கை கணக்குவழக்கில்லாம பெருகிட்டே போகுது. ஒட்டுமொத்த மனிதகுலமும் குலை நடுங்கித் துடிச்சிட்டிருக்கு.

மனுசன் சந்திரனில் கால் பதிச்சான்; செவ்வாயில் நடைபயில முயற்சி பண்ணுறான்; சில நிமிடங்களில் ஒட்டுமொத்த உலகையும் எரிச்சிச் சாம்பலாக்குவதற்கான அழிவுக் கருவிகளைக் கண்டுபிடிச்சி வெச்சிருக்கான்.

இந்த அளவுக்கு அறிவு வளர்ச்சி பெற்ற மனுசனால கொரோனாவுக்கு ஒரு மருந்து கண்டுபிடிக்க முடியல.

இந்த மண்ணில் எதுஎதுக்கோ பஞ்சம் வருது. ஆனா, எந்தக் காலத்திலும் மனுசங்க கும்பிடுற சாமிகளுக்கு பஞ்சமே வந்ததில்ல. அந்த அளவுக்கு ஆயிரக் கணக்கில் கற்பனை பண்ணி வெச்சிருக்கானுக. ஆனா.....

எந்தவொரு சாமியும் கொரோனாவின் கொலை வெறியைத் தடுத்து நிறுத்தல.

சாமிகளை நினைச்சாலே மனசெல்லாம் கொதிக்குது. இந்த நிலையில், திருப்பதி ஏழுமலையான் கோயிலில் ஒர் அதிசயம் நிகழ்ந்ததா செய்தி போட்டு மனக்கொதிப்பை அதிகப்படுத்தறானுக.

அந்தச் செய்தி.....

#கடந்த 10 நாட்களில் திருப்பதி கோயில் உண்டியலில் 1.25 கோடி ரூபாயில் இருந்து 1.45 கோடி ரூபாய் வரை வசூலாகியுள்ளது. அதாவது 20 முதல் 25 சதவீதம் வசூல் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் புரட்டாசி மாதம் மூன்றாவது சனிக்கிழமை ஆகும். அந்த நாளில் மட்டும் திருப்பதியில் 22,533 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். இது ஊரடங்கிற்குப் பிறகான தரிசனத்தில் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும். மேலும் அன்றைய தினம் வேண்டுதலின் பேரில் 7,494 பேர் மொட்டை அடித்துக் கொண்டனர்.#

'இமயமலையில் ஏழுமலையான் கொடுக்கும் சர்ப்ரைஸ்...'[https://tamil.samayam.com/latest-news/india-news/more-than-22-thousand-pilgrims-had-darshan-on-single-day-at-tirupati-temple/articleshow/78483958.cms?story=6]

ஏழுமலையான் சர்ப்ரைஸ் கொடுக்கிறாராம்! என்ன வெங்காய சர்ப்ரைஸ்?!