அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 26 நவம்பர், 2020

'ஆண்மை நீக்கம்'...அசத்தும் பாகிஸ்தான்!!!

பாகிஸ்தானில் கற்பழிப்பு வழக்குகள் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கற்பழிப்புக் குற்றவாளிகளுக்குக் கடும் தண்டனை வழங்க வேண்டும் என அனைத்துத் தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர். குற்றவாளிகளைப் பொது இடத்தில் வைத்துத் தூக்கிலிடவேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. இது தொடர்பாக அரசு தீவிர ஆலோசனை மேற்கொண்டது. 

இந்நிலையில், கற்பழிப்புக் குற்றவாளிகளுக்கு ஆண்மையை நீக்கும் தண்டனை வழங்குவதற்கும்[ஏற்கனவே இந்தோனேசியா அரசு இது குறித்த சட்டத்தை இயற்றியுள்ளது], கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பதற்கும் பிரதமர் இம்ரான்கான் கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளதாக ஊடகங்களில் செய்தி வெளியாகி உள்ளது. 

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுப்பதற்கான அவசரச் சட்ட வரைவை அமைச்சரவைக் கூட்டத்தில் தாக்கல் செய்தபோது, இந்தக் கடுமையான தண்டனை குறித்து முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது. எனினும், இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

காவல்துறையில் பெண்களை அதிக அளவில் சேர்ப்பது, கற்பழிப்பு வழக்குகளை விரைவாக விசாரிப்பது, சாட்சிகளின் பாதுகாப்பு ஆகிய அம்சங்கள் இந்த வரைவுச் சட்டத்தில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

குற்றவாளிகளைப் பொது இடத்தில் வைத்துத் தூக்கிலிடவேண்டும் என்று சில மந்திரிகள் பரிந்துரை செய்ததாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 

ஆண்மை நீக்கத் தண்டனை ஒரு தொடக்கமாக இருக்கும் என்று குறிப்பிட்டுள்ள ஆளுங்கட்சி செனட்டர் பைசல் ஜாவேத் கான், விரைவில் இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றப்படும் என்று கூறியுள்ளார்[https://www.maalaimalar.com/news/world/2020/11/25115909/2104078/Tamil-News-Pakistan-PM-Approves-Chemical-Castration.vpf?utm_source=vuukle&utm_medium=talk_of_town].

இம்ரான்கான் கொள்கையளவில் இதை ஒப்புக்கொண்டுள்ளதாக மாலைமலர் செய்தி வெளியிட்டுள்ள நிலையில்[நவம்பர் 25, 2020 11:59 IST], இதே நாளில்[25/11/2020] பிற்பகல் 4:19 மணி அளவில் இம்ரான்கான் ஒப்புதல் வழங்கியுள்ளதாக, சத்தியம் தொ.கா. செய்தி வெளியிட்டுள்ளது[தினமலர், தினகரன் போன்ற ஊடகங்களும் செய்தி வெளியிட்டுள்ளன]. செய்தி கீழே.

#இந்தியாவைப் போன்று, பாகிஸ்தான் நாட்டிலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. இதனைத் தடுக்கும் விதமாக அந்நாட்டில் அதிரடி நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது.

அதாவது, பாலியல் குற்றவாளிகளுக்கு, ரசாயனங்களைப் பயன்படுத்தி, ஆண்மை இழக்கும் தண்டனையைக் கொடுப்பதற்கான சட்டத்திற்கு அந்நாட்டுப் பிரதமர் இம்ரான்கான் ஒப்புதல் வழங்கியுள்ளார்# https://www.sathiyam.tv/pm-imran-khan-approves-chemical-castration-of-rapists/

குற்றவாளிகளுக்குக் கடுங்காவல் தண்டனை, ஆயுள் தண்டனை, தூக்குத் தண்டனை என்று பல தண்டனைகளை வழங்கியும் பெண்கள் மீதான வன்புணர்வுக் குற்றங்கள் குறையாத நிலையில், 'ஆண்மை நீக்கம்' என்பது இம்மாதிரிக் குற்றங்கள் குறைவதற்கு வழிவகுக்கக்கூடும்.

பாகிஸ்தான் இந்தியாவின் எதிரி நாடாக இருந்தபோதிலும், குற்றவாளிகளுக்கு வழங்கப்பட வேண்டிய ஆண்மை நீக்கம்' தொடர்பான சட்டத்தை அது இயற்றியிருப்பது பெரிதும் பாராட்டுதலுக்குரிய நற்செயலாகும்.

ஏனைய நாடுகள் யோசித்து முடிவெடுப்பதற்கு முன்னதாக, பாகிஸ்தானைப் பின்பற்றி 'ஆண்மை நீக்கத் தண்டனை' குறித்து உரிய முறையில் இந்திய அரசு சட்டம் இயற்றுதல் வேண்டும் என்பது நம் போன்றோர் விருப்பம் ஆகும்.

===============================================================

ஆண்மை நீக்கம்:  ரசாயன முறை அல்லது பிற வழிகள் மூலம் ஆணின் விரைகளைச் செயலிழக்கச் செய்தலாகும்.