ஞாயிறு, 20 டிசம்பர், 2020

குற்றங்களும் கடந்த காலக் கொடூரத் தண்டனைகளும்!!!


சிலுவையில் அறைதல்:
சிலுவையில் அறையப்படுவது பண்டைய மரணதண்டனை முறைகளில் மிகவும் கொடூரமானது என்று அறியப்பட்டுள்ளது. இது கிமு 6ஆம் நூற்றாண்டு முதல் கிபி 4ஆம் நூற்றாண்டுவரை நடைமுறையில் இருந்தது. முக்கியமாக, செலூசிட்ஸ், கார்தீஜினியர்கள், பெர்சியர்கள் மற்றும் ரோமானியர்கள் இந்தத்  தண்டனை முறையைப் பின்பற்றி வந்தனர். 

குற்றம் சாட்டப்பட்டவர் ஒரு பெரிய மரச் சிலுவையில் அறையப்பட்டுத் தொங்கவிடப்படுவார். இறக்கும்வரை ஊணுறக்கமின்றிச் சித்ரவதைப்படுவார். ஏசுவுக்கு இததண்டனை அளிக்கப்பட்டதென்பது யாவரும் அறிந்ததே.

தோலை உரிப்பது: 

இது இடைக்காலத்தில் நடைமுறையில் இருந்த தண்டனையாகும். தோல் உரிக்கப்படும்போது குற்றம் சாட்டப்பட்டவர் உயிருடன் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது. தோல் அகற்றப்பட்ட பிறகு, தண்டனைக்கு உட்படுத்தபட்டவர் தூக்கி எறியப்படுவார்கள். வலியை அதிகரிக்க உப்பு போன்ற பொருட்களும் பயன்படுத்தப்பட்டன. 13ஆம் நூற்றாண்டில் தமிழகத்தில் இத்தண்டனை வழக்கத்தில் இருந்தது.

நொறுக்கும் சக்கரம்:

இத்தண்டனை மத்தியக் கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா போன்ற நாடுகளில் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடைமுறையில் இருந்தது. கிரேக்கத்தில் உருவாக்கப்பட்ட இது, அங்கிருந்து பிரான்ஸ், ரஷ்யா, ஜெர்மனி, ஸ்பெயின், போர்ச்சுகல் மற்றும் சுவீடன் போன்ற பிற நாடுகளிலும் பரவியதாகச் சொல்லப்படுகிறது. 

நீண்டதொரு மரச் சக்கரத்தில் தண்டிக்கப்படுபவரின் உறுப்புகள் அனைத்தும் பிணைக்கப்பட்டிருக்கும். அவருடைய எலும்புகள் அனைத்தையும் உடைக்க, சக்கரத்தின் இடையிடையே சுத்திகளும் இரும்புக் கம்பிகளும் பொருத்தப்பட்டிருக்கும். நீண்ட நேரம் சித்திரவதைப்பட்டுத்தான் அவர் சாக வேண்டும்.

குடலை உருவுதல்:

திருடர்கள் மற்றும் விபச்சாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களைத் தண்டிக்க இந்த முறை பயன்படுத்தப்பட்டது. குடலும் மற்ற முக்கிய உறுப்புகளும் ஒவ்வொன்றாக உடலில் இருந்து அகற்றப்படும். இது இங்கிலாந்து, நெதர்லாந்து, பெல்ஜியம் மற்றும் ஜப்பானில் நடைமுறையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. 

கழுமரம்:

இது 15ஆம் நூற்றாண்டில் நடைமுறையில் இருந்தது. கூர்மையான கம்பத்தில் உட்காரும்படி தண்டனைக்குரியவர் கட்டாயப்படுத்தப்படுவார். அது, மலக்குடல் வழியாகவும், யோனி வழியாகவும்,  வாய் வழியாகவும் துளையிட்டு வெளியேறும். இரத்தப்போக்கும் காயங்களும் ஏற்பட்டுத் தண்டனைக்குரியவர்  உயிர் துறப்பார். 

இது ரோமானியர்கள், சீனர்கள், கிரேக்கர்கள் மற்றும் துருக்கியர்களுக்கு மிகவும் பிடித்தமான தண்டனை முறையாகும். இது ஆசியாவிலும் ஐரோப்பாவிலும் இடைக்காலத்தில் நடைமுறையில் இருந்தது. தமிழகத்தில் சமணர்களையும் பௌத்தர்களையும் சித்ரவதை செய்து கொல்வதற்குப் பயன்படுத்தப்பட்டது.

யானை மிதித்தல்:

குற்றம் சாட்டப்பட்டவர் கனமான கல்லோடு பிணைக்கப்பட்ட நிலையில், யானையால் மிதிபட்டு உடல் நசுங்கிச் சாவார். இத்தண்டனை முறை 4000 ஆண்டுகளுக்கு முன்னரே ரோமானியராலும் வியட்நாமியராலும் பயன்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. இதுவும் தமிழகத்தில் நடைமுறையில் இருந்தது.

தொங்கவிட்டுத் துண்டித்தல்:

ஸ்பெயினில் மற்றும் ஆசியாவின் சில பகுதிகளில் இந்த முறை பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த முறையைப் பயன்படுத்தி, குற்றம் சாட்டப்பட்டவர் தலைகீழாக தொங்கவிடப்படுவார். ஒரு பெரிய கத்தி கொண்டு அவர் இரண்டாக அறுக்கப்படுவார். இறுதியில் தலையும் பிளக்கப்படும். தலை துண்டிக்கப்படும் வரை அவர் உயிருடன் இருக்கும்படி பார்த்துக்கொள்வார்கள். 

ஆயிரம் வெட்டுகள்:

"நீடித்த மரணம்" அல்லது "ஆயிரம் வெட்டுக்களால் மரணம்" என்றும் சீனாவில் லிஞ்சி என்றும் அழைக்கப்படுகிறது, இது கி.பி 900இல் குற்றவாளிகளைத் தண்டிக்கப் பயன்படுத்தப்பட்ட ஒரு மோசமான தண்டனையாகும். இந்த முறையில் ஒருவரின் உடலின் பாகங்கள் ஒவ்வொன்றாக இடைவெளி விட்டு சாகும்வரை வெட்டப்படும்.  வெகுஜனக் கொலை, எஜமானரைக் கொல்லுதல் போன்ற குற்றங்களுக்கு இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. அரசர்கள் மக்களை அச்சுறுத்துவதற்காக இதைப் பயன்படுத்தினர். சில சமயங்களில் சிறு குற்றங்களுக்காகவும் இந்தத் தண்டனை வழங்கப்பட்டது. சில பேரரசர்கள் இந்தத் தண்டனையைத் தங்கள் எதிரிகளின் குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்கினர்.

நம் கேள்வி:

விதம் விதமானதும் படுபயங்கரமானதும் கொடூரமானதுமான தண்டனை முறைகளைக் கண்டுபிடிப்பதற்கான அதிபுத்திசாலித்தனத்தை மனிதனுக்குக் கற்பித்தவர் யார்?

வேறு யார்? அவரேதான்! அவரின்றி அணுவும் அசையாதே!!

ஹி>>>ஹி>>>ஹி!!!

===============================================================

உதவி: https://tamil.boldsky.com/