பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 25 டிசம்பர், 2020

வலைப்பதிவர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் 'தினமலர்'!!!

கற்பனை நிகழ்வுகளுக்குக் கவர்ச்சி முலாம் பூசிச் செய்தி வெளியிடுவதில் முன்னிலை பெற்றிருக்கும் நாளிதழ் தினமலர்.

புளுகுவதையே தொழிலாகக் கொண்டு வயிறு வளர்க்கும் இந்தப் 'புளுகுமலர்' சமூக வலைதளப் பதிவர்களைப் 'புளுகுப் புலிகள்' என்கிறது.

இது, நேற்று வெளியிட்ட செய்தி ஒன்றுக்குக் கொடுத்த தலைப்பு, 'கும்பாபிஷேகத்தையும் கேள்விக்குள்ளாக்கி எல்லை மீறும்... சமூக வலைதள புளுகுப்புலிகள்!  https://m.dinamalar.com/detail.php?id=2676910[டிச 24,2020 14:26]

வலைத்தளப் பதிவர்களில் யாரெல்லாம் கும்பாபிஷேகத்தைக் கேள்விக்குள்ளாகினார்கள் என்பதற்கான பட்டியலையோ அதற்கான ஆதாரங்களையோ இது வெளியிடவில்லை.

அவ்வப்போது, மூடநம்பிக்கைகளைச் சாடி எழுதும் பதிவர்ளைத் தரக்குறைவாகத் தாக்குவதற்கென்றே இவ்வாறான பொய்ச் செய்திகளை இது வெளியிடும். இதழ் விற்பனையைப் பெருக்குவதற்கு இது வழக்கமாகக் கையாளும் உத்தியும்கூட.

இச்செய்தியை ஒட்டி இதன் கழிசடை வாசகன் எழுதிய கருத்துரையையும் இது வெளியிட்டிருக்கிறது.

vadivelu - thenkaasi,யூ.எஸ்.ஏ

*ஒருமுறையாவது இப்படி இந்து மத வழிபாடு முறைகளில் தலையிடுவோரை இந்துக்களின் எதிரி என்று அடையாளம் கண்டு செம்மையாக புடித்தால் பின்னாளில் இன்னொருவன் தலை இட யோசிப்பான்*

எவனோ ஒரு கூமுட்டையின் பெயரில் இந்தத் தினமலம், பதிவர்களுக்கு எதிராக இப்படியெல்லாம் வன்முறையைத் தூண்டுகிறது.

அவ்வப்போது, பெரியாரை இழிவுபடுத்தும் வகையில் எழுதிவரும் இந்த 'அண்டப்புளுகு' இதழ், ஒரு நாறவாயன் பெயரில் பெரியாரையும் அவமரியாதை செய்து குதூகளித்திருக்கிறது.

*'சொரியன் பெரியார் சிலப்பதிகாரம் , திருக்குறளை பற்றிச் சொன்ன வார்த்தைகளை ( டைமோண்ட் முத்து சொன்ன வார்த்தைகளை) இங்கு பிரசுரிக்க இயலாது[பயம் காரணம்]. இவனெல்லாம் தமிழுக்கும் துரோகி'*

தவறில்லாமல் தமிழ் எழுதத் தெரியாத இந்தச் சொறி நாய் பெரியாரைச் 'சொரியன்' என்கிறது.

குடமுழுக்கு தொடர்பான பதிவர்களின் கருத்துகளுக்கு எதிராக மடாதிபதிகளிடமிருந்தும், கோயில் பூசாரிகளிடமிருந்தும் மாற்றுக் கருத்துகளைப் பதிவு செய்திருக்கிறது இந்த நாளிதழ். அவற்றில் கீழ்க்காணும் கருத்துரையும் ஒன்று:

'கோவில்களில் 12 ஆண்டுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் செய்வது பாரம்பரியமாகப் பின்பற்றப்பட்டு வருகிறது. 12 ஆண்டுக்கு மேற்பட்ட பராமரிப்பு இல்லாத பாழடைந்த கோவில்களில் இறைவன் இருக்கமாட்டார்[தூணிலும் இருப்பார்; துரும்பிலும் இருப்பார்னு காலங்காலமாக ஆன்மிகங்கள் சொல்லிவருவது பொய்யா?!]; கோவிலை விட்டு வெளியேறி, தலவிருட்சத்தில் ஓராண்டு காலம் காத்திருப்பார்.

அப்போதும் கும்பாபிஷேகம் செய்யப்படவில்லை எனில் அதன் பின்னர் சூரிய மண்டலத்தில் அமர்ந்து கோவிலைக் கண்காணித்து வருவார்[எத்தனை பிரமாண்டமான பிரபஞ்சத்தைப் படைத்த கடவுள், ஒரு கும்பாபிஷேகத்துக்காகக் காத்திருப்பார் என்பது எத்தனை அபத்தம்! இதைவிடவும் வேறு வகைகளில் கடவுளை இழிவுபடுத்திட முடியுமா என்ன?!].

இறைவனுடன், பரிவாரத் தெய்வங்களும் சூரியமண்டலத்தில் அமர்ந்து யாரேனும் குடமுழுக்குச் செய்ய வருகிறார்களா என கண்காணிப்பர். அதன் பிறகும் குடமுழுக்குச் செய்யவில்லை எனில் தெய்வ சாபம் ஏற்படும். இதனால் நாட்டை ஆள்பவர் முதல் மக்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவர். தண்ணீர்ப் பற்றாக்குறை, இயற்கைப் பேரிடர், பேரழிவு நோய்கள் என துன்பங்கள் வரும். பக்தர்களால் பழைய கோவில் கட்டுமானம் திடீரென புதுப்பிக்கப்பட்டாலும், இயற்கைச் சீற்றங்களால் பாதிக்கப்பட்டாலும், 12 ஆண்டுக்கு முன்னதாகவே கும்பாபிஷேகம் செய்யலாம் எனவும் ஆகமங்கள் கூறுகின்றன.'

இவரைப்  போலவேதான் ஏனைய கருத்துரையாளர்களும் ஏற்கனவே சொல்லப்பட்ட புனைந்துரைகளைச் சொல்லிச் சொல்லிச் சொதப்பியிருக்கிறார்கள்.

கோவை கௌமார மடாலயம் குமரகுருபர சாமி மட்டும் குடமுழுக்கின் தேவை குறித்த, கொஞ்சம் எதார்த்தமான காரணங்களை முன்வைத்திருக்கிறார். அது.....

'பல கோவில் கோபுரங்களில், மரங்கள் முளைத்துச் சிற்பங்கள் அழிந்து கொண்டிருப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இது பற்றிப் பக்தர்கள் அனைவரும், அரசுக்குத் தகுந்த விழிப்புணர்வு ஏற்படுத்திக் கோவில்களைப் புதுப்பிக்க வேண்டும். அதிகாரிகளை நியமித்துக் காணாமல் போன கோவில் சிலைகளைத் தேடுகிறோம். அழிந்து கொண்டிருக்கிற கோவில்களைப் புதுப்பிக்கத் தனியாக ஆணையமே அமைக்கலாம்.'

இனியேனும், 'புளுகர் திலகம்' தினமலர் திருந்த வேண்டும். தவறினால், வலைத்தளப் பதிவர்கள் திருத்துவார்கள்!!!

===============================================================