அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 12 ஜனவரி, 2021

வாழ்க்கை வாழ்வதற்கே! கடவுள், மதம், ஆன்மா, ஆவி, மறுபிறப்பு, சாதிபேதம் என்றெல்லாம் விவாதித்து வீணடிக்க அல்ல!!

டவுள், படைப்பு நோக்கம், பிரபஞ்சத் தோற்றம்  என்று புரியாத எதைப்பற்றியெல்லாமோ புரியாமலே பேசப்படுவது தத்துவம். அதென்ன வாழ்க்கைத் தத்துவம்?

எளிதாகப் புரிவதும், சுவாரசியமானதும் ஆன பயனுள்ள பதிவு இது. வாசியுங்கள்.

இந்தப் பூமியின் வயசு ஏறத்தாழ[The age of the Earth is approximately] 4.54 ± 0.05 billion years (4.54 × 109 years ± 1%).[1][2][3][4 [-Wiki] என்று விஞ்ஞானிகள் அடிச்சிவிட்டிருக்காங்க.   

இவங்க சொல்றதெல்லாம் சரியா தப்பான்னு ஆராயறதுக்கான அறிவெல்லாம் நமக்கு இல்ல. கோடி கோடி ஆண்டுகள்னு பொத்தாம் பொதுவாச் சொல்ல மட்டும்தான்  நமக்குத் தெரியும்.

பூமியின் ஆயுசு இப்படின்னா, சூரியனுடையது இதைவிடவும் மிகப் பல மடங்கு அதிகம் என்கிறார்கள்.

சூரியனைவிடவும் பலப்பல மடங்கு பெருசான நட்சத்திரங்களின் ஆயுசு இன்னும் இன்னும் இன்னும் அதிகம். இதுகளுக்கு அப்பன், முப்பாட்டன் கொள்ளுப் பாட்டன், எள்ளுப்பாட்டன் எல்லாம் இருக்காங்க. அதுகளுடைய ஆயுசையும் கணக்குப் பண்ணிகிட்டுப் பொழுதைக் கழிக்கிறாங்க விஞ்ஞானிங்க.

எல்லார்த்தையும் உள்ளடக்கிய ஒன்னுதான் 'அண்டம்'கிறான்; அப்புறம் 'பிரபஞ்சம்'கிறான். 'வெளி'[Space]யில் அவ்வப்போது நிகழ்கிற பெருவெடிப்புகள் காரணமா இதுகளெல்லாம் தோன்றுவதும் அழிவதுமாக இருக்கிறதுகளாம்.

கட்டுப்பாடு இல்லாமல் தொடர்ந்துகொண்டே இருக்கும் இந்த நிகழ்வுகளுக்கு 'முற்றுப்பெறுதல்' என்பதே இல்லை என்கிறார்கள். முற்றுப்பெறாத இம்மாதிரி நிகழ்வுகளை உள்ளடக்கிய பிரபஞ்ச[வெளி]த்தின்  ஆயுளோடு மனிதர்களுடைய ஆயுளையும் ஒப்பிட்டுப் பார்த்தா..... 

மனிதர்களுடைய ஆயுள் அற்பம்...அற்பம்...வெகு அற்பம்... அற்பத்திலும் அற்பம்[துல்லியமாகச் சொல்ல வார்த்தைகள் இல்லை].

மனுசங்க ஆயுள் நூறு[சிலர் கூடக்குறைய வாழலாம்]. அதுல, தூங்கினது, துக்கிச்சது, பொறாமைப்பட்டது, கலகம் செய்ததுன்னு இப்படி விரயம் பண்ணினதையெல்லாம்  கழிச்சா, எஞ்சியிருப்பதுதான் அவர்களுடைய ஆயுள்.

அது எவ்வளவு தேறும்?

ஒரு அஞ்சு ஆண்டு?..... ஊஹூம்... பத்து?..... ஊஹூ...ஊஹூம்...... 

ஒரு பத்து ஆண்டுன்னே வைச்சுக்குவோம். 

இந்தப் பத்து ஆண்டுகளை எப்படிக் கழிக்கணும்?

தம்மையும் கவனிச்சிக்கணும். தம்மைச் சார்ந்தவங்களுக்கு மட்டுமல்லாம, ஒட்டுமொத்த மனுச குலத்துக்கும் மத்த உயிர்களுக்கும் உதவி செஞ்சி வாழணும். அப்படி வாழ்ந்து கழிச்சிருந்தாத்தான், அந்தப் பத்து வருசத்தையும் பயனுள்ள வகையில்  வாழ்ந்ததா அர்த்தம்.

எனவே, அடியேன் வலியுறுத்த விரும்புவது.....

சூது, வாது, வஞ்சகம், பொறாமைன்னு எத்தனையோ கெட்ட கெட்ட குணங்களுக்கு மனசில் இடம் தந்ததோடு, கடவுளைக் கற்பிச்சி மதங்களை உருவாக்கி, ஒருத்தனோடு ஒருத்தன் அடிச்சிகிட்டு லட்சம் லட்சமா செத்துத் தொலைஞ்சது மட்டுமல்லாம, ஆன்மா, மறுபிறப்பு, சொர்க்கம், நரகம்னு எதையெதையோ கற்பனை பண்ணி, கணக்குவழக்கில்லாத மூடநம்பிக்கைகளுக்கு ஆளாகி, அந்தக் கொஞ்சமே கொஞ்சம் வாழ்நாளையும் வீணடிச்சாங்க மனுசங்க; இப்போதும் வீணடிக்கிறாங்க.

நாமும் வீணடிக்கலாமா?

கூடாதுங்க...கூடவே கூடாதுங்க!

வருகைக்கு நன்றிங்க!

===========================================================================