பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வெள்ளி, 19 மார்ச், 2021

இனி கச்சத்தீவு நம் கையில்?!?!

"கச்சத்தீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன."

தமிழர்களின் காதுகளில் தேன் பாய்ச்சுகிற இந்தச் செய்தி[இன்று முற்பகலில் வெளியானது https://www.ibctamil.com/india/80/161686 ] உண்மையானதா, இல்லை, விரைவில் நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்குகளை அள்ளுவதற்காகப் பா.ஜ.க. நடுவணரசு கையாளும் தந்திரமா?

இராமநாதபுரத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது இந்திய மத்தியக் கப்பல் மற்றும் தரைவழிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் 'வி கே சிங்'தான்  மேற்கண்ட அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கீழ்க்காணும் வகையிலான சில தகவல்களை அவர் வழங்கியுள்ளார்.

<>கச்சத்தீவை மீண்டும் இலங்கையிடமிருந்து மீட்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

<>இலங்கை அரசுடன் நமது வெளியுறவுத் துறை, வேளாண்மைத் துறை மற்றும் மீனவர் நலத்துறை அமைச்சர்கள் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

<>இலங்கை அரசால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் அனைத்தும் திரும்பப் பெறப்பட்டு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

<>ஆழ்கடல் மீன்பிடித் திட்டமும், தமிழக மீனவர் பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையிலேயே செயல்படுத்தப்பட்டு வருகிறது. 

<>இராமநாதபுரத்தில் விமான நிலையம் அமைய அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அமைச்சர், தேர்தலை மனதில் வைத்து இவ்வாறு பேசவில்லை என்றால், விரைவில் கச்சத்தீவு மீட்டெடுக்கப்படுமா?

இலங்கையரசு சம்மதிக்கவில்லை என்றால் உரிய நடவடிக்கை எடுத்து அதைப் பணிய வைக்குமா?

ஒருவேளை, அண்டை நாடும் அதன் நட்பு நாடுமான சீனாவிடம் அது உதவி கோரினால், பா.ஜ.க. அரசின் அடுத்தக் கட்ட நடவடிக்கை நாம் பாராட்டும் வகையில் அமையுமா?

நடுவணரசு அமைச்சரின் அறிவிப்பின் பின்னணியில், இவ்வாறான விடை தெரியாத கேள்விகள் வரிசைகட்டி நிற்கின்றன.

விடை அறிய.....

காத்திருப்போம்.


======================================================================================