பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 24 மே, 2021

எனக்கு இது புதுசு! உங்களுக்கு?

சற்று முன்னர் https://tamil.webdunia.com தளத்தின் மூலம் நான் அறிந்த இந்தச் செய்தி என்னளவில் புதியது. உங்களுக்கு?

"வாசித்தால்தானே தெரியும்" என்கிறீர்களா? ஹி...ஹி...ஹி!
 
[செவ்வாய்க் கோளில் வெற்றிகரமாகத் தரையிறங்கிய சீனாவின் விண்கலம்]

=================================

செய்தி:
பூமியில் உயிர்வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உருவாவதற்கு முன்னரே செவ்வாய்க் கிரகத்தில் உயிர்கள் இருந்திருக்கலாம் என ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

இச்செய்தி, இத்தாலியில் நடைபெற்ற 'கோல்ட்ஸ்மிடட்' கலந்தாய்வில் அறிவிக்கப்பட்டுள்ளது. 

இத்தகவலைப் பேராசிரியர் 'ஸ்டீவன் பென்னர்' என்பவர் அளித்துள்ளார்.

பல நூறு கோடி ஆண்டுகளுக்கு முன்பே இது நிகழ்ந்திருத்தல்கூடும். பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கு முன்னதாகவே, சிகப்புக் கிரகமான செவ்வாய்[இதன் மேற்பரப்பில் காணப்படும் இரும்பு ஆக்சைடு இக்கோளைச் செந்நிறமாகக் காட்டுகிறது]க் கிரகத்தில் உயிர்கள் சிறப்பாக வாழ்ந்திருத்தல் வேண்டும் என்கிறார் பேராசிரியர்.

ஆர்.என்.ஏ., டி.என்.ஏ., புரோட்டீன்கள் ஆகியவை உயிர் வாழ்வதற்கு அவசியமான முதல் மூன்று மூலக்கூறுகள் ஆகும். இதில் உயிர்கள் தோன்றுவதற்கு மிக முக்கியக் காரணமான ஆர்.என்.ஏ. வை உருவாக்குவதற்குத் தேவையான தாதுப்பொருட்கள் பூமியில் முற்காலத்தில் கடலில் கலந்திருந்தாலும், பூமியைவிடவும் செவ்வாய்க் கிரகத்தில்தான் அதிக அளவில் நிறைந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூரியனிலிருந்து 230 மில்லியன் கிலோ மீற்றர்கள்[மீட்டர்] தொலைவில் (143,000,000 mi) செவ்வாய்க் கிரகம் உள்ளது. இது சூரியனை ஒரு தடவை சுற்றிவர 687 நாட்கள் எடுத்துக்கொள்கிறது. இப்படத்தில் நீல நிறம் பூமியையும், சிவப்பு நிறம் செவ்வாயையும் குறிக்கிறது[விக்கிப்பீடியா].

செவ்வாய்க் கோள்...காணொலி[நன்றி: தினத்தந்தி]:
======================================================================