செவ்வாய், 25 மே, 2021

'அது'க்கு 'இது' தடையாக இருந்தால்.....!?!

#முட்டைகள் இட்ட பிறகு, அனைத்து முட்டைகளும் உடைந்து மீன் குஞ்சுகள் வெளியே வரும்வரை மீண்டும் இனப்பெருக்கம் செய்வதில்லை சில வகை மீன் இனங்கள். சில நேரங்களில், அனைத்து முட்டைகளும் உடையும் முன்பே தாய்க்கு இனப்பெருக்கம் செய்யும் ஆசை வருவதுண்டு. அம்மாதிரி நேரங்களில் உடையாத முட்டைகளை அதுவே விழுங்கி விடும். முட்டைகள் இல்லாததைக் கண்டு, ஆண் மீன்கள் இனப்பெருக்கம் செய்ய முன்வரும்.

ஒரு சில பறவை இனம், 'கலவி' செய்வதற்கான வாய்ப்பு வரும்போது, தாமே முட்டையிட்டுப் பொறித்த குஞ்சு அதற்குத் தடையாக இருந்தால், அதைக் கொன்றுவிடுவது உண்டு#

[மேற்கண்ட தகவல்கள் சில மாதங்களுக்கு முன்பு படித்தவை[ஆதாரங்களைக் குறித்து வைக்கவில்லை. வருந்துகிறேன்].

முன்பு படித்த இவை, அவ்வப்போது என் நினைவுக்கு வந்துபோவது ஒரு நிகழ்வாகிவிட்டது. இதற்குத் தூண்டுதலாக அமைபவை ஊடகங்களில் வெளிவரும் கணிசமான செய்திகள். அவற்றில் சில.....

*'அவரின் மனைவிக்கு, குன்.....[ஊர்ப் பெயர் தவிர்க்கப்பட்டுள்ளது] உள்ள பிரியாணிக் கடையில் பணியாற்றி வந்த ஒருவருடன் கள்ளக்காதல். இதனால், கணவனுக்கும் மனைவிக்குமிடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. கள்ளக்காதலனுடன் சேர்ந்து வாழ்வதற்காகக் குழந்தைகளைக் கொன்றுவிட்டு, 'அபி.....' தப்பிச் சென்றது தெரிய வந்தது' -இது, தினமலரில்[02.09.2018] வெளியான செய்தி.

*'கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் 3 மாதப் பச்சிளம் குழந்தையைக் கழுத்தை அறுத்துக் குப்பை மேட்டில் வீசிய தாயைப் போலீசார் கைது செய்தனர். குழந்தையைக் கொன்றுவிட்டு, யாரோ கடத்திச் சென்றுவிட்டதாக நாடகமாடினார் அந்தத் தாய்' -இது, கோவை மாவட்ட நிகழ்வு. -தினத்தந்தி[14.08.2018].

*'கணவனைப் பிரிந்து தனியாக வசித்து வரும் நிலையில், ஒருவருடன் கள்ள உறவில் அந்தப் பெண் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கள்ளக்காதலன் பணிக்குச் சென்ற நிலையில், மற்றொரு கள்ளக்காதலனுடன், இணைந்து அந்தப் பெண் மது அருந்தியுள்ளார். அப்போது மது போதை தலைக்கேறிய நிலையில், யாரும் செய்யத் துணியாத செயலில் அவர் ஈடுபட்டுள்ளார்.

ஏதும் அறியாத அவரின் 4 வயதுப் பெண் குழந்தைக்கு மதுவைக் கட்டாயப்படுத்தி ஊட்டி, கண்ட மேனிக்கு அடித்து உதைத்துக் கொடுமைப்படுத்தியதாகக் கூறப்படுகிறது.'  -https://www.sathiyam.tv/

ப்படியான அதிர்ச்சி தரும் செயல்களில் சில பெண்கள்[ஆண்களும்தான்] ஈடுபடுவது ஆச்சரியப்படத்தக்க நிகழ்வுகள் அல்ல. காரணம், ஒரு காலக்கட்டத்தில் நம் மூதாதையர்கள் 100% விலங்குகளாக வாழ்ந்தவர்கள்.

அதன் விளைவாகத்தான், மீன் இனத்திலும் சில பறவையினத்திலும் இன்றளவும் காணப்படுகிற இந்தப் பலவீனம் சில மனிதர்களிடத்திலும் எஞ்சியிருக்கிறது.

இப்பலவீனம், கொடுந்தொற்றாகப் பரவுமா, முற்றிலும் அழிந்தொழியுமா?' என்னும் கேள்விக்குக் காலம்தான் பதில் சொல்ல வேண்டும்! 
=============================================================================================