பக்கங்கள்

அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

வியாழன், 24 ஜூன், 2021

'குடிமகன்' ஆக 'இது'வும் காரணமா?! அடக் கடவுளே!!!

#“அவர் செத்துட்டார். செக்ஸ் மட்டும்தான் வாழ்வுன்னு நம்பி வாழ்றவங்களுக்கு இதுதான் முடிவு. அவருக்கு இந்த லோகத்தில் சந்தோசப்பட வேற ஒன்னும் இல்ல” என்றான் நெல்லையப்பன்.

“உன் சித்தப்பாவைப் பத்திச் சொல்லுறே. அவருக்குக் கல்யாணம் ஆகலையா?” என்றான் இவன்.

“கல்யாணமாகி அஞ்சு குழந்தைகள் இருக்கு.”

“அப்புறம் ஏன் இந்த செக்ஸ் வெறி?”

“படிக்கும் நாளிலிருந்தே அதில் அவருக்கு ஈடுபாடு அதிகம். வயசு ஆக ஆக வெறி அதிகம் ஆயிடிச்சி. ஆனா, அதுக்கான வாய்ப்புகள் ரொம்பவே குறைஞ்சி போச்சி. ஏக்கத்தைத் தவிர்க்கக் குடிச்சார். குடிச்சிக் குடிச்சி நுரையீரலில் ஓட்டைகள் விழுந்துடிச்சி. ஆனாலும், அதனால அவர் சாகல; விஷம் குடிச்சிச் செத்தார்.”

“அவர் சாவு உன்னை ரொம்ப பாதிச்சதோ?”

“இல்ல. மனுசனாப் பொறந்த எல்லாருமே என்னிக்காவது ஒரு நாள் செத்துத்தானே ஆகணும். இவர் சாவை மட்டுமல்ல, என்னுடைய சாவை நினைச்சிக்கூட நான் பயந்ததே இல்ல. சொல்லப்போனா, சாவை நேரடியாவே சந்திச்சவன் நான்.....”

குறுக்கிட்டான் இவன். “ரொம்ப சுவாராசியமா இருக்கும்போல. சொல்லேன்” என்றான்.

நெல்லயப்பன் சொல்லத் தொடங்கினான்.....#

[நெல்லையப்பன் சொன்ன கதை அப்படியொன்றும் சுவையாக இல்லை என்பதால் இடுகைக்கு முற்றுப்புள்ளி!]


====================================================================================
நன்றி:
பிரபல எழுத்தாளர் நீல. பத்மநாபனின்.‘[அ]லட்சியம்’ சிறுகதையின் ஒரு பகுதி இது. நூல்:‘சேரநாட்டுச் சிறுகதைகள்’; ஐந்திணைப் பதிப்பகம், சென்னை; முதல் பதிப்பு: டிசம்பர், 2004.
====================================================================================