அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

சனி, 26 ஜூன், 2021

'காக்கை-நரி'க் கதை... புதுசோ புதுசு!!!

'காக்கை - நரி'க் கதை மிகப் பழையது. கால மாறுதலுக்கேற்ப 'முடிவு' மாற்றியமைக்கப்பட்ட கதைகளும் உள்ளன. இது புதியது; இன்றையச் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்பட்டது. உங்களுக்கு மிகவும் பிடிக்கும்!

                                                    *  *   *

பாட்டி வடை சுட்டுக்கொண்டிருந்தாள்.

எச்சில் துப்புவதற்குப் பக்கவாட்டில் அவள் திரும்பிபோது,  தட்டிலிருந்த வடைகளில் ஒன்றை 'லபக்'கிய காக்கை, அருகிலிருந்த காட்டுக்குப் பறந்து சென்று ஒரு மரக்கிளையில் அமர்ந்தது.

அங்கே வந்த ஒரு நரி வடையைக் கவரும் எண்ணத்துடன், "காக்கா... காக்கா, உன் குரல் ரொம்ப இனிமையானதுன்னு கேள்விப்பட்டிருக்கேன். எனக்காக ஒரு பாட்டுப் பாடு" என்றது.

நரியின் புகழ்ச்சிக்கு மயங்கிய காக்கையும் வாயில் வடை இருப்பதை மறந்து பாட ஆரம்பித்தது. அதன் வாயிலிருந்த வடை நழுவித் தரையில் விழுந்தது.

நரி புருவம் சுருக்கியது.

"எத்தனை தடவை கேட்டாலும் சலிக்காத, நெஞ்சில் தேன் சிந்தும் தமிழ்ப் பாடல்கள் எவ்வளவோ இருக்க, 'கர்...கர்...கர்'னு இந்தியில் பாடுறே நீ. சகிக்கல" என்றது நரி, கடும் கோபத்துடன்.

அதைக் காதில் போட்டுக்கொள்ளாத காக்கை தொடர்ந்து இந்திப் பாட்டைப் பாடிக்கொண்டே இருந்தது.

கடுப்பாகிப் போன நரி, "உன் இந்திப் பாட்டு வேண்டாம். உன் ஊத்தை வாயால் தொட்டு எடுத்த வடையும் வேண்டாம்"னு சத்தம் போட்டுச் சொல்லிவிட்டு அங்கிருந்து ஓட்டமாய் ஓடி மறைந்தது!

====================================================================================