வெள்ளி, 30 ஜூலை, 2021

'பன்னீர்-எடப்பாடியார்' பார்வைக்கு ஒரு 'பகீர்' துயர வரலாறு!!!





கி.பி.14ஆம் நூற்றாண்டின் தொடக்கம். பாண்டிய நாட்டில் 'குலசேகரப் பாண்டியனின் ஆட்சி.

அவனுக்குச் சுந்தர பாண்டியன், வீர பாண்டியன் என்று இரண்டு மகன்கள். தந்தைக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றுவதில் இருவருக்குமிடையே மிகக் கடுமையான போட்டி.

ஒரு கட்டத்தில், தொடர் தோல்விகளுக்குப் பிறகு ஓர் இழிசெயலைக் கையாண்டான் சுந்தர பாண்டியன். 

டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜியின் தாள் பணிந்து, தன் தம்பி மீது தான் தொடுக்கவுள்ள போரில் உதவிடப் படை அனுப்புமாறு கெஞ்சினான் என்பதே அது.

தென்னக அரசுகளைச் சூறையாடிக்கொண்டிருந்த, [கில்ஜியின் படைத் தலைவன்]மாலிக்காபூர் ஒரு படையுடன் தமிழகம் வந்தான்; மதுரையைக் கைப்பற்றினான்; வீரபாண்டியன் தோற்றோடினான்.

மாலிக்காபூர் சுந்தரபாண்டியனுக்கு முடி சூட்டாமல், ஒரு பிரதிநிதியை நியமித்தான். பின்னர்,  தமிழின உடன்பிறப்புகளின் ஒற்றுமையின்மை காரணமாகப் பிற இனத்தவரின் ஆதிக்கம் இங்கு அதிகமானது; தமிழகமும் தமிழினமும் சீரழிந்தன.

இது, அந்த வரலாற்று அவல நிகழ்வின் மிகச் சுருங்கிய வடிவம் மட்டுமே

விரிவான செய்திகளுக்கு...  

http://www.kotravainews.com/history/history-of-tamil-nadu-tamilnadu-varalaru-tamilsamuthayam/chera-chola-pandya-pandyar-history-pallavargal/pandiyar-varalaru/

இந்த வரலாற்றுச் சோக நிகழ்வு, இன்றையத் தமிழ்நாட்டின் அரசியல் சூழ்நிலையில் அடிக்கடி என் நினைவுக்கு வந்து அடிமனதை உறுத்திப் புண்படுத்துகிறது. அனைத்துத் தமிழர்களிடமும் இதைப் பகிர்ந்திடல் வேண்டும் என்ற உந்துதல் காரணமாகப் பதிவு செய்கிறேன்.

நடுவணரசுடன் 'அனுசரித்து'ப் போய், 'பயன்' பெறும் வகையில் தமிழ்நாட்டை ஆண்ட, இனியும் ஆள்வதற்கு ஆசைப்படும் 'எடப்பாடி'யார்[அவர்கள்], பன்னீர்ச்செல்வம்[அவர்கள்] ஆகிய இருவரும் தமிழர்களே என்பதால், அவர்களுடனும் இதைப் பகிர்வதோடு, இந்தத் துயர்மிகு வரலாற்று நிகழ்வு குறித்தப் பதிவை அவர்களுக்குச் சமர்ப்பித்திருக்கிறேன்.

நன்றி.

====================================================================================