அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 15 செப்டம்பர், 2021

கன்னடனாக இருந்து 'ஒரிஜினல்' இந்தியன் ஆன அண்ணாமலை!!!


தமிழ்நாட்டுக்கு நீட் தேர்விலிருந்து விலக்குப் பெறுவது தொடர்பாக, சட்டப்பேரவையில் 13.09.2021 அன்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், அது பற்றிப் பல்வேறு கருத்துகளை அரசியல் கட்சியினர் பதிவுசெய்து வருகிறார்கள். இந்நிலையில், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, காட்டமாக..... 

"திமுக தலைகீழாக நின்றாலும் தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்கும்" என்று கூறியுள்ளார்.

இது 'நக்கீரன்' செய்தி[https://www.nakkheeran.in/24-by-7-news/thamizhagam/annamalai-criticized-dmk-party].

'நீட்' தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்களிக்கப்பட்டு, +2 மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளுக்குத் தேர்வு செய்யப்படுவதால் நடுவணரசுக்கு எந்தவொரு இழப்பும் இல்லை.

அப்புறம் ஏன் அண்ணாமலை இத்தனை காட்டமாக அறிக்கை வெளியிடுகிறார்?

தமிழ் மாநிலத்திடமிருந்து பறித்துக்கொண்ட உரிமைகளில் ஒன்றை அது[மருத்துவக் கல்லூரிகளுக்கான நுழைவுத் தேர்வு] இழக்க நேர்கிறது என்பதாலா?

கர்னாடகத்தில் காவல்துறை அதிகாரியாக இருந்தவரை, 'கன்னடன்'["கடைசி மூச்சு வரை.. உயிர் இருக்கும்வரை.. நான் பெருமைமிக்க கன்னடன்.."] ஆக இருந்த அண்ணாமலை தமிழ்நாடு வந்த பிறகு 'தமிழன்' ஆகவில்லை. மாறாக.....

தமிழ் மொழிப் பற்றோ, தமிழினப் பற்றோ இல்லாத 'ஒரிஜினல்' இந்தியனாகவே இருக்கிறார். 

ஒரிஜினல் இந்தியனான அண்ணாமலை, தமிழ்நாடு 'பாஜக' தலைவராக இருப்பதால் தமிழன் ஆகிவிட மாட்டார். இன்றும் என்றும் அவர்  இந்தியனே.

இந்திய அரசு தமிழ்நாட்டிடமிருந்து பறித்த ஓர் அதிகாரத்தை அதனிடமே திரும்ப ஒப்படைப்பதை 'ஒரிஜினல் இந்தியன்' அண்ணாமலை விரும்பவில்லை.

ஒரு நாட்டிற்கான 'ஆட்சியமைப்பு', நீதி மன்றங்கள் என்று எல்லாமே அந்த நாட்டு மக்களுக்காகத்தான்.

மக்களின் விருப்பத்திற்கேற்ப சட்டங்கள் திருத்தப்படுவதும், நீதி மன்றங்கள் தாம் அளித்த தீர்ப்பை மறுசீராய்வு செய்வதும் நடப்பில் உள்ள ஒன்றுதான்.

உண்மை இதுவாக இருக்கையில், 'தலைகீழாக நின்றாலும்' என்று காழ்ப்புணர்வுடனும் வன்மத்துடனும் அண்ணாமலையார் அதிரடியாய் அறிக்கை விட்டது ஏன்?

தான் ஓர் அநாகரிக அரசியல் செய்யும் 'முரடன்' என்றும், இந்த முரடனைக் கண்டு அரசியல் எதிரிகள் அஞ்சி நடுங்க வேண்டும் என்று எண்ணுகிறாரா?

இந்த முரடனைரை 'பாஜக' தலைமை தமிழ்நாட்டின் 'பாஜக' கட்சித் தலைவர் ஆக்கியதன் உள்நோக்கம் என்ன?

ஆட்சியைக் கைப்பற்றுவதற்கும், அதைத் தக்கவைப்பதற்கும், பெரும் எண்ணிக்கையிலான மூடநம்பிக்கைகளை மக்கள் மீது திணிப்பது மட்டும் போதாது, அண்ணாமலை போன்ற முரடர்களும் தேவை என்று நம்புகிறதோ?!?!

====================================================================================