அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

திங்கள், 24 ஜனவரி, 2022

காலஞ்சென்ற 'கடவுள்' புட்டப்பர்த்தி சத்திய சாயிபாபா!!!

['பகவான்' பாபாவின் முதுமைப் பருவம்]
சராசரி மனிதர்களைப் போலவே, உண்டு உறங்கி வாழும் சாதாரண மனிதர்கள் மகான்கள் ஆக்கப்பட்டுக் கடவுள் எனப்படுபவருக்கு இணையாகப் போற்றி வழிபடப்படும் அதிசயம் இந்த மண்ணில் நிகழ்ந்துகொண்டிருக்கிறது[தன்னலமற்ற பொதுப்பணிகளால் சிறந்த மனிதர்களாகப் போற்றப்படுவது வேறு].

இந்த அதிசயத்தை நிகழ்த்துபவர்கள், நம் மக்களில் பெரும்பான்மையினராக உள்ள பக்தர்கள்[இப்படியான ஒரு பக்தர் பரம்பரை உருவாகக் காரணமானவர்கள் யாரெல்லாம் என்பது குறித்த மிக நுணுக்கமானதும் விரிவானதும் ஆன  ஆய்வு மிகவும் தேவையான ஒன்று.]

இந்த நம் பக்தர்களைத் திருத்துவது, கடலில் பெருங்காயத்தைக் கரைத்துவிட்டு, அதன் வாசனையை நுகர முயற்சிப்பதற்கு ஒப்பானதாகும்.

உலக அளவில் பெரும் எண்ணிக்கையிலான பக்தர்களால் கடவுளாகக் கொண்டாடப்பட்டவர் புட்டபர்த்தி சத்திய சாயிபாபா என்பவர். இவரின் சர்ச்சைக்குரிய வாழ்க்கையின் பொதுவான பல நிகழ்வுகளைப் பலரும் அறிந்திருக்கலாம். குறிப்பிடத்தக்க, கொஞ்சம் தகவல்கள் மட்டும் பக்தர்களின் சிந்தனைக்காகத் தொகுக்கப்பட்டுள்ளன.

                                           *   *   *   *   *

*சத்ய சாய்பாபா மற்றும் இவரது ஆசிரமம் மீது பலமுறை எதிர்மறை விமர்சனங்களும், குற்றசாட்டுகளும் எழுந்துள்ளன. ஆசிரமத்தில் பாலியல் தொல்லைகள் கொடுக்கப்பட்டன என்ற புகார்களும் பதிவாகியுள்ளன.

*அக்டோபர் 20, 1940இல் தன் 14ஆவது வயதில், தன்னை ஷீர்டி சாய்பாபாவின் மறுபிறவி என அறிவித்துக் கொண்டார் சத்யநாராயண ராஜு என்னும் இயற்பெயர் கொண்ட புட்டப்பர்த்தி சாயிபாபா. அவ்வப்போது இதை நினைவுகூர்வது இவரின் வழக்கம்.

*மேஜிக் வேலைகள் செய்வதில் திறமை பெற்றவர் இவர். இதுகுறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

*இந்தியாவின் பழம்பெரும் மேஜிக் கலைஞரான பி.சி. சர்கார், "சத்யநாராயண ராஜுவும்[புட்டப்பர்த்தி சாயிபாபா]], நானும்  ஒன்றாகத்தான் மேஜிக் கற்றோம் என்றும் கூறியுள்ளார்.

*ஒரு புறம் சர்ச்சைகள் அதிகரித்தாலும், மறுபுறம் சமூக சேவைகளில் ஈடுபட ஆரம்பித்தார் சத்ய சாய்பாபா. முக்கியமாக, புட்டப்பர்த்திப் பொது மருத்தவமனையில் தொடங்கி, அதைச் சத்ய சாய் மருத்துவ ஆராய்ச்சி மையமாக வளர்த்து, ஒரு சிறந்த மருத்துவ உதவி செய்யும் மையமாக மாற்றினார் என்பது வியந்து பாராட்டத்தக்கது.

*84 வயதான சாயிபாபா உடல் நலக்குறைவு, மூச்சுத் திணறல் காரணமாக 'அருள்மிகு சத்தியசாயி மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனை'யில் 2011 மார்ச் 28ஆம் தேதி சேர்க்கப்பட்டுத் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவந்தார். 

இவரது உயிர் பிழைப்பிற்காகப் பக்தர்கள் பிரார்த்தனைகள் செய்து வந்தனர். இவரது உடல் நிலையில் பெரும் அளவில் முன்னேற்றம் எதுவும் ஏற்படவில்லை. அமெரிக்காவில் இருந்து வரவழைக்கப்பட்ட மருத்துவக் குழுவினர் 24 மணி நேரமும் பாபாவின் உடல் நிலையைக் கவனித்துவந்தனர். இந்நிலையில் 2011 ஏப்ரல் 24 ஞாயிற்றுக்கிழமை காலை இந்திய நேரம் 07:40 மணிக்கு இவரது உயிர் பிரிந்தது.

*இவர் இறந்த அன்று (ஏப்ரல் 24, 2011) பூட்டப்பட்ட இவரது தனியறையான 'யசுர் வேத மந்திரம்' சுமார் ஒன்றரை மாதங்கள் கழித்துச் சூன் 16, 2011 அன்று திறக்கப்பட்டது. அவ்வறையில் பெரும்பாலும் பணமும் நகையும் கணினிகளுமே இருந்தன. இவையனைத்தும் இவரது கல்வி அறக்கட்டளையில் பயிலும் மாணவர்களைக்கொண்டு தனியே கணக்கெடுத்துப் பிரிக்கப்பட்டுப் பாரத ஸ்டேட் வங்கியில் முதலீடு செய்யப்பட்டன.

==========================================================================

உதவி:

Wikipedia, https://www.tamilvbc.com/?p=9115