அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 26 ஜனவரி, 2022

கொஞ்சம் சிரித்து நிறைய அழலாம்!

//ஸ்விட்சர்லாந்தில், பாலியல் வன்புணர்வு வழக்கில் தீர்ப்பளித்துள்ள பெண் நீதிபதி ஒருவர், "குற்றவாளி 11 நிமிடம் மட்டும்தான் பாலியல் வன்புணர்வு செய்தார்" எனக் கூறி[எவ்வளவு நேரம் புணர்ந்தால் அதிகபட்சத் தண்டனை என்பதைச் சொல்லியிருக்கலாம். ஹி... ஹி... ஹி!!!] அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனையைக் குறைத்திருக்கிறார். அவரின் தீர்ப்புக்குக் கண்டனம் தெரிவித்து மகளிர் அமைப்பினர் போராடி வருகின்றனர்//

இது செய்தி. 

இதை வாசித்ததும் சிரிக்கத் தோன்றுகிறதா? வாய்விட்டு நிறையவே சிரித்துவிடுங்கள். அடுத்து வருபவை கண்ணீர் சிந்தி அழவைக்கும் சோகச் செய்திகள்[ஆறுதல் அளிக்கும், நீதிபதிகளின் நல்ல தீர்ப்புகள் உட்பட].

                                         *   *   *   *   *

இந்தியாவில்.....

*ஒவ்வொரு 155 நிமிடங்களுக்குள் 16 வயதுக்குக் கீழுள்ள சிறுமி ஒருவரும், ஒவ்வொரு 13 மணி நேரங்களுக்குள் 10 வயதுக்குக் கீழுள்ள ஒரு சிறுமியும் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாகின்றனர்.

*2015ஆம் ஆண்டு 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வன்புணர்வாளர்களால் சீரழித்துச்  சித்ரவதை செய்யப்பட்டிருக்கிறார்கள்.

*அரசால் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் கலந்துகொண்ட 53.22 சதவீதக் குழந்தைகள், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாகியிருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

*குழந்தைகளைப் பலாத்காரம் செய்வோரில் 50 சதவீதத்தினர் அந்தக் குழந்தைகளுக்குத் தெரிந்தவர்கள் அல்லது, நம்பிக்கைக்குரியவர்கள் மற்றும் பராமரிப்போராக உள்ளனர்.

*'பள்ளிக்குச் செல்லும் மகளை, மகனுடன் சேர்ந்து தந்தை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்தார்' -இது, கடந்த வாரம் 'மும்பை'யில் நடந்த கொடூரம்.

*ஏற்கனவே வன்புணர்வு செய்யப்பட்ட சிறுமியை, மனநல ஆலோசகரிடம் அழைத்துச் செல்வதாகப் பெற்றோரை நம்பவைத்து, சிறுமியை மட்டும் அழைத்துச் சென்று சீரழித்தார் ஒரு காவல்துறை அதிகாரி. இது, தில்லியில் நடந்தது.

*பெற்றோர்கள், சிறுமிகளைச்  சிறைக் கைதிகள் போலவும், கல்வி கற்கும் இயந்திரங்களாகவும் மட்டும் பார்க்காமல் அவர்களோடு அன்பாகவும், நட்பாகவும் உறவாடி, அவர்களுக்குப்  பாலியல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தாதது, சிறுமியர் அதிக அளவில் வன்புணர்வு செய்யப்படுவதற்கான காரணங்களில் மிக முக்கியமான ஒன்று.

*'பாலுறவு விழைவுக்காக ஓர் ஆண் ஒரு பெண்ணின் எந்தவோர் உடல் பாகத்தைப் பயன்படுத்தினாலும், அது நுழைத்தல் செயலாக இல்லாமல் இருந்தாலும் (Non- penetrative), இந்தியத் தண்டனைச் சட்டத்தின்படி அது பாலியல் வன்புணர்வாகவே(Rape) கருதப்படும்' என்று கேரள உயர்நீதிமன்றம் மிக முக்கியத் தீர்ப்பு ஒன்றை வழங்கியுள்ளது.

*'பாதிக்கப்படும் குழந்தை சொல்லும் ஒரு சாட்சியத்தை வைத்து மட்டும் வன்முறையாளரைக் குற்றவாளி என்று நிரூபிக்கமுடியும்.' -இதுவும் ஒரு நீதிமன்றத் தீர்ப்புதான்.

==========================================================================

*****இணையத்திலிருந்து திரட்டப்பட்ட தகவல்களின் தொகுப்பு இது. திரட்டியவற்றில் கணிசமானவை பலரும் அறிந்திருக்கக்கூடும் என்பதால் நீக்கப்பட்டன.

==========================================================================

குறிப்பு:

பேசியில்[phone] இடுகையை வாசிப்பவர்கள், முகப்புப் பக்கத்தை(முழுப் பக்கம்) அணுக, இடுகையின் கீழ் உள்ள 'வலையில் காட்டு' என்னும் இணைச் சொற்களை அழுத்துதல்[கிளிக்] வேண்டும்.