அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 16 மார்ச், 2022

'பிரபஞ்சம் 13,800,000,000! தனி மனிதன் 100!'... ஏன் இந்த அநீதி?!

பிரபஞ்சம் தோன்றியது  13,800,000,000 ஆண்டுகளுக்கு முன்பு[the age of universe 13.8 billion years].

இதில் இடம்பெற்றுச் சுற்றுவதும் சுழலுவதுமாக இயங்கிக்கொண்டிருக்கும் கணக்கிலடங்காத நட்சத்திரங்கள், கோள்கள் என்றிவற்றில் ஒன்றான பூமியின் வயது 4,540,000,000[earth 4.54 billion years] ஆண்டுகள். 

உயிரினங்களின் உற்பத்தி தொடங்கியது 354,000,000[3,54 billion years. புவி தோன்றி 1 பில்லியன் ஆண்டுகளுக்குள் உயிரினங்கள் தோற்றம் பெற்றன] ஆண்டுகளுக்கு முன்னர். 

உயிரினங்களில், வாலில்லா மனிதக் குரங்குகள் 4 கோடி ஆண்டுகளுக்கு முன்பும், ஆதி மனிதர்கள் 10 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பும் தோன்றினார்கள். 

இவை, அறிவியலாளர் தரும் தகவல்கள்.

மேற்கண்டவற்றில், பிரபஞ்சத்தின் ஆயுளும், பூமியின் ஆயுளும், உயிரினங்களின்[உயிர்களின் தொகுப்பு] ஆயுளும்  பில்லியன் கணக்கில் உள்ளன. மனித இனத்தின் ஆயுள்கூட லட்சக்கணக்கில்.

இவையெல்லாம் நம்மைப் பிரமிப்பில் ஆழ்த்தும் தகவல்கள்தான். இருப்பினும்.....

துய்த்தல் சுகத்தை அனுபவிக்கிற தனித்தனி[மனிதன் உட்பட] உயிர்களின் ஆயுளோ வெகு அற்பம்[இனம் என்பது 'உயிர்களின் தொகுப்பைக் குறிக்கும் ஒரு சொல். இனத்துக்குத் 'துய்த்தல்' என்பது இல்லை].

இது, மனிதனை உள்ளடக்கிய தனி உயிர்களுக்கு இயற்கை செய்த துரோகமா, கடவுளின் கைங்கரியமா?!

=========================================================================