அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

செவ்வாய், 25 ஜூலை, 2023

அர்த்த ராத்திரியில் அலற வைக்கும் ‘அமுக்குவான்’ பேய்!!!

ழ்ந்த உறக்கத்தின்போது, குறிப்பாக மல்லாந்த நிலையில் துயில்கொள்ளும்போது ஏதோ ஒன்று நம்மைக் கொஞ்சமும் அசையவிடாமல் அமுக்கிகொள்வதும், “ஆய்...ஊய்” என்று சில வினாடிகள் அலறித் துடித்த பிறகே அதன் பிடியிலிருந்து விடுபடுவதுமான வெறுக்கத்தக்க அனுபவத்தைப் பெறாதவர் இல்லை என்றே சொல்லலாம்.


நம்மை அமுக்குவது ‘அமுக்குவான் பேய்’ என்பார்கள்.

உண்மையில், பேய்தான் நம்மை அமுக்குகிறது என்றால், அதற்குக் காரணங்கள் இருந்தாக வேண்டும்.

ஒன்று, உயிர் வாழ்ந்தபோது எதிரியாக இருந்த ஒருவர் மரணம் அடைந்து பேயான பிறகு, நம்மைக் கொன்று பழிவாங்குவதற்காக[உயிரோடு இருந்தபோது அதைச் செய்ய முடியவில்லை] இருக்கலாம். அவ்வாறு இருந்தால் சில வினாடிகளில் அது நம்மவிட்டு விலகிட வாய்ப்பே இல்லை.

உயிரோடு இருந்தபோது நம்மைக் காதலித்து[உயிருக்குயிராய்] அது நிறைவேறாததால், செத்த பிறகு பேயாய் நம்மை ஆலிங்கனம் செய்து ஆசையைத் தணிப்பதற்காக இருக்கலாம். இருந்தால்.....

பெண்களை ஆண் பேய்களும், ஆண்களைப் பெண் பேய்[மோகினி]களும் இறுக்கி அணைத்தல் வேண்டும்[ஹி... ஹி... ஹி!!!]

அணைப்பில் வேறுபாடு தெரியாதது மட்டுமல்லாமல், அணைப்பு[அமுக்குதல்] சில நொடிகளில் முடிந்துபோவதால் அதுவும் சாத்தியமில்லை.

ஆக, நாம் அறிந்த இந்தக் காரணங்களாலேயே, நம்மை அமுக்குவது பேய் அல்ல என்பதை அறிந்திட இயலுகிறது.

இன்றைய அறிவியலும் இதை உறுதிப்படுத்துகிறது.

நாம் உறங்கும் அறையில் உயிர்க்காற்று[ஆக்சிஜன்] குறைவாக இருந்தால், உடல் தசைகளில் ரத்த அழுத்தம் குறைந்துபோகும்.

ரத்த அழுத்தம் குறைவதால் தசைகள் தளர்வடையும்..

அந்நிலையில், ஏதோ சில காரணங்களால், உடல் இயக்கத்திற்கு மூளை கட்டளை பிறப்பிக்கும்போது அது இயங்குவதற்குக் கால தாமதம் ஆகிறது.

“ஆ...ஊ...” என்று அலறும்போது, தசைகள் போதிய ஆக்சிஜனைப் பெற்றுவிடுவதால், சில நொடிகளில் சுயநினைவைப் பெறுகிறோம்.

ஆக, அமுக்குவான் பேய் நம்மை அரவணைப்பது தவிர்க்கப்பட  வேண்டுமாயின், உறங்கும் அறை நல்ல காற்றோட்டம் உள்ளதாக இருப்பது மிக அவசியம்.

அதீத மன உளைச்சல், கவலை போன்றவற்றிற்கு இடம் தருவதால், தசைகளில் உயிர்க்காற்று குறைவதற்கு வாய்ப்புள்ளது என்பதையும் நினனவில் பதித்தல் அவசியம்.

                                      *   *   *   *   *

***ஏற்கனவே வாசித்தறிந்த அறிவியல் காரணத்தை நினைவுகூர்ந்து எழுதிய பதிவு இது.