அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 9 ஆகஸ்ட், 2023

“கோமியம் கொல்லுமா கிருமிகளை?”... “ஆம்” என்னும் ‘பாஜக’ கூமுட்டைகள்!


கர்நாடகாவை சேர்ந்தவர் நடிகர் பிரகாஷ் ராஜ் பிரபல நடிகர் மட்டுமல்ல, சீரிய சிந்தனையாளர்; மூடநம்பிக்கைகளை வாய்ப்பு அமையும்போதெல்லாம் கடுமையாகச் சாடிவருபவர்.

மூடநம்பிக்கைகளைப் பரப்புவோரையும், அவர்கள் எவ்வளவு பெரிய மனிதராக இருந்தாலும், கொஞ்சமும் அஞ்சாமல் கண்டிப்பவர்; பிரதமரான ‘மோடி’யின் செயல்பாடுகளைத் தொடர்ந்து விமர்சனம் செய்பவர்.


கர்நாடகா மாநிலம் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில், திரைப்படம்&சமுதாயம் சார்ந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியில் இவர் கலந்துகொண்டார்.


கல்லூரியின், ‘பாஜக’ ஆதரவு மாணவர்கள் சிலரும், உள்ளூர் பாஜக’வினரும் பிரகாஷ் ராஜ் வரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்ததோடு, அரங்குக்குள் நுழையவும் முயன்றிருக்கிறார்கள்.


காவல்துறையினர் அவர்களை நுழையவிடாமல் தடுத்துவிட்டதில் கலந்துரையாடல் அமைதியாக நடைபெற்றது.


பகுத்தறிவாளர் பிகாஷ் ராஜ் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.


அவர் சென்ற பின்னர், மக்களின் மூடநம்பிக்கைகளை நம்பியே கட்சி நடத்தும் ‘பாஜக’வினரும், அவர்களின் அடிப்பொடிகளான  சில மாணவர்களும் பிரகாஷ் ராஜ் நடமாடிய[கால்பட்ட] இடங்களையெல்லாம் கோமியம் தெளித்துச் சுத்தம் செய்தார்கள் என்பது https://cineulagam.com/ செய்தி[4 மணி நேரம் முன்பு]


விலங்குகளில் ஒன்றான பசுமாட்டைத் தெய்வமாக்கிக் கொண்டாடுவதோடு[ஆடுகள் எருமை மாடுகள் போன்றவை கொண்டாடப்படுவதில்லை] கழிவுகளை வெளிக்கொணரும் அதன் சிறுநீரைப்[கோமியம்] புனிதமானது என்று நம்பும் இவர்களைப் போன்ற கூரு கெட்ட கூமுட்டைகள் உலகெங்கும் தேடினாலும் கிடைக்கமாட்டார்கள்[தந்தை பெரியார் திராவிடர் கழகத்தைச் சேர்ந்த கோவை கு.ராமகிருஷ்ணன், ``வேப்பிலை போன்ற பல்வேறு மருத்துவக் குணமுள்ள தாவரங்களைப் பயன்படுத்தித் தயாரிக்கப்பட்ட மருந்துகள், உலகம் முழுக்கப் பயன்பாட்டில் இருக்கின்றன. அதையெல்லாம் கண்டுபிடித்த விஞ்ஞானிகள், பசு மாட்டின் சிறுநீரில் மருத்துவக் குணம் இருந்திருந்தால் விட்டுவைத்திருப்பார்களா! இதை மிகப்பெரிய மருத்துவ மூலதனமாக மாற்றியிருப்பார்களே! ஆகவே, அடிப்படையில் இது உண்மையில்லை. இங்கு, பசு ஒரு தெய்வமாக மதிக்கப்படுவதால், அதிலிருந்து கிடைக்கக்கூடியவையும் புனிதம் என்று உருவாக்கி வைத்துள்ளார்கள்" என்கிறார்].


ஒருவர்[பிரகாஷ் ராஜ்] பகுத்தறிவாளராக[அல்லது நாத்திகர்] இருந்தால், அவர் உடலெங்கும் நாத்திகம் பரப்பும் நச்சுக் கிருமிகள் ஊடுருவியிருந்து, அவர் நடந்துசெல்லும்போதெல்லாம் உடம்பிலிருந்து வெளியேறிப் பாதச் சுவடு பட்ட இடங்களிலெல்லாம் பரவுமா?


“பரவும்” என்று சொல்லுகிற இந்தப் ‘பாஜக’ கும்பலை எத்தனை அசிங்கமான வார்த்தைகளால் திட்டினாலும் மனம் ஆறுதல் பெறாது!


* * * * *