அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

புதன், 27 மார்ச், 2024

“நீ சக்தியின் சொரூபம்”... பட்டினியில் பரிதவிக்கும் பெண் வேட்பாளருக்கு மோடி புகழாரம்!!!

நரேந்திர மோடி இந்த நாட்டின் பிரதமர்; பல கோடிக்கு அதிபதியோ அல்லவோ, பல கோடீஸ்வரர்கள் அவருக்கு நாளும் பணி செய்யக் காத்திருக்கிறார்கள்.

மேலும், ஈடு இணையற்ற பக்திமான் என்பதால் கடவுளுக்கு நிகரான கருணையுள்ளம் கொண்டவராக இருப்பார் என்பது நம் நம்பிக்கை.

இது தேர்தல் நேரம். தன் கட்சியை[பாஜக]ச் சார்ந்த ஒரு பெண் வேட்பாளருடன் உரையாட நினைத்துத் தொலைபேசி மூலம் தொடர்புகொள்கிறார்[மேற்கண்ட படம்] மோடி.

பெண்களின் துயரங்களை அவரிடம் விவரித்த அந்தப் பெண்[பாஜக வேட்பாளர்] சொல்கிறார்.....

“என்னுடையது ஏழ்மையான குடும்பம். என் கணவர் தமிழ்நாட்டில் வேலை[கூலி வேலை] பார்க்கிறார்” என்று தன் குடும்ப நிலையை விவரித்திருக்கிறார்.

“கவலைப்படாதே பெண்ணே. தேர்தல் வேலையைக் கவனி. மிக விரைவில், தமிழ்நாட்டிலிருக்கும் உன் கணவருக்கு இங்கேயே ஒரு வேலைக்கு ஏற்பாடு செய்கிறேன்” என்று மோடி சொல்லியிருக்க வேண்டும். சொன்னாரா?

ஊஹூம்.

அந்தப் பெண்ணிடம், “நீங்கள் சக்தியின் சொரூபம்” என்கிறார். அந்தச் சக்தி திரிணமுல் காங்கிரஸின் ஊழலை அம்பலப்படுத்த வேண்டுமாம்.

வயிற்றுப்பாட்டுக்கு வழியில்லாமல் கணவனை அயல் மாநிலத்திற்குக் கூலிக்காரனாக அனுப்பிய ஓர் ஏழைப் பெண்ணைச் ‘சக்தியின் சொரூபம்’ என்கிற இவரை எவ்வகையில் விமர்சிப்பது?

ஏடாகூடமாக எதையும் சொல்லிவைத்தால், அதன் பின்விளைவுகளை எதிர்கொள்வதற்கான தெம்பு இல்லாததால்.....

“தேர்தலில் பெரும்பான்மை பெற்று மோடி மீண்டும் பிரதமரானால், பில்லியனோ பில்லியன் ரூபாய் செலவில் ‘சக்தி’க்கு[சிவபெருமானின் மனைவி] ஒரு கோயில் கட்டுவார்” என்று மட்டும் சொல்லிக்கொள்ள விரும்புகிறோம்.