எனது படம்
அறிவியல் கண்டுபிடிப்புகள் உட்பட மனிதர்கள் பல்வேறு சாதனைகள் நிகழ்த்துவதற்கு வழிவகுத்தது ‘நம்பிக்கை’தான். இது இல்லாமல் தனி மனிதனோ சமுதாயமோ மேம்பாடடைதல் இயலாது. ஆனால், நம்பிக்கைக்குச் செயல் வடிவம் தர முற்படும்போது, அது சாத்தியமாவது குறித்து ஆழ்ந்து சிந்திப்பது மிக அவசியம். தவறினால், அதுவே ‘மூடநம்பிக்கை’க்கு மூலாதாரமாக அமைந்துவிடும்.

செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

கடவுள் கையில் சூலம் எதற்கு? முதுகு சொறியவா?!

 

 · 
பின்தொடர்

#கடவுளைக் கும்பிடவேண்டும். அவருக்குப் பூஜை செய்யவேண்டும்; கோவில் கட்டவேண்டும், 

கோவிலுக்குச் சென்று கடவுளைக் கும்பிடுவது போதாதென்று வீட்டில் ஒரு பூஜை அறை வைக்கவேண்டும். அதில் தினமும் இருவேளை சாமி கும்பிடவேண்டும். 

ஆனால், இப்படிக் கும்பிடுகிறவர்களை நிலநடுக்கம், பேய் மழை, நிலச்சரிவு போன்றவற்றை உண்டுபண்ணிப் பூண்டோடு கடவுள் அழிப்பார்; விபத்தில் சிக்க வைத்துச் சின்னாபின்னப்படுத்திச் சாகடிப்பார்; கொரோனாவில் சிக்கிச் சித்திரவதைக்குள்ளாக்கிப் பரலோகம் போகவைப்பார்; டெங்குவில் வதைபட்டு, ‘டிங் டிங் டிங்’குன்னு சாவு மணி அடித்து யமலோகம் அனுப்புவார். மனிதர்களை இத்தனைக் கொடூரங்களுக்கு உள்ளாக்கும் கொலைகாரக் கடவுளை எதற்கு வணங்கவேண்டும்?

செத்தவர்கள் எல்லோரும் ராமனைச் செருப்பால் அடி அடி அடி என்று அடித்தவர்களா? நிலச்சரிவில் புதையுண்டவர்கள் எல்லாம் பிள்ளையாரை முச்சந்தியில் போட்டு உடைத்தவர்களா? ‘அர்த்தமுள்ள பொந்து மதம்’ எழுதிய கண்ணதாசன் ஏன் 56 வயதிலேயே செத்தார்? ரமண மகரிஷி ஏன் புற்று நோயால் புட்டுகிட்டாரு? சங்கராச்சாரிக்கு முன்னாடி இருக்கிற‌ இன்டிகேட்டர் ஏன் அவுட் ஆகி கண்ணாடி போட்டுக்கொண்டார்?

மேற்கண்ட அவலங்களைத் தடுக்க முடியாது என்றால் கடவுள் எதற்கு? 


அவர் கையில் சூலம் எதற்கு? முதுகு சொறியவா?


தட்டையான வேல் எதற்கு? ஆம்லெட்டைத் திருப்பிப் போடவா?#

                      *   *   *   *   *

*** மேற்கண்டது ‘கடவுள் நம்பிக்கை தேவையா?” என்னும் கேள்விக்கு அழகிரிசாமி அவர்கள் அளித்த பதில். அவருக்கும் ‘Quora'வுக்கும் நம் நன்றி.


முக்கிய அறிவிப்பு:

இந்து மதத்தை மட்டும் சாடுவதாக எவரும் மனக்கொதிப்புக்கு உள்ளாக வேண்டாம். இஸ்லாம், கிறித்தவம் என்று பிற மத மூடத்தனங்களையும் நாம் விட்டுவைப்பதில்லை.