ஞாயிறு, 6 அக்டோபர், 2024

எத்தனை எத்தனைக் கேள்விகள்! எப்படி நம்புவது கடவுளை!?

கடவுள் குறித்த '©தி சென்ஸ் ஹப்'இன் மிக விரிவான ஆய்வுரையில் கூறியது கூறல், தெளிவின்மை போன்ற குறைகள் உள்ளன. அவை தவிர்க்கப்பட்டு, தேர்வு செய்யப்பட்ட சிறந்த கருத்துகள் நம் மொழி மரபுக்கேற்பத் தொகுக்கப்பட்டுள்ளன.

*கடவுள், மனிதர்கள் உட்பட உயிர்களுக்காகப் பிரபஞ்சத்தைப் படைத்தார் என்றால், அது எல்லை அல்லது வரம்பு கண்டறியாத அளவுக்கு இத்தனைப் பெரிதாக இருப்பது அவசியமா?

*மனிதர்களைப் படைத்த கடவுள் எந்தவொரு புலனாலும் அறிய முடியாத அளவுக்கு ஏன் மறைந்திருக்க வேண்டும்?  

*மதங்கள் மிகப்பல. அவை அனைத்திற்கும் ஒருமித்த கடவுள் கொள்கை இல்லாமல்போனது ஏன்?

*உயிர்களும் மனிதர்களும் பாவ காரியங்களைச் செய்யும்போது கடவுள் மட்டும் அதைச் செய்வதில்லை என்பது நம்பத் தகுந்ததாக இல்லைதானே?

*கடவுள் இருப்பதற்கான உண்மையான அழுத்தமான ஆதாரங்களைக் கண்டறிந்து சொன்னவர் எவருமில்லையல்லவா?

*எல்லாம் வல்ல, அனைத்தையும் அறிந்த, அனைத்தையும் நேசிக்கும் கடவுள் இருக்கிறார் என்றால், இயற்கைப் பேரழிவுகள், வறுமை, நோய்கள், தாங்கொணாத கொடூர நிகழ்வுகள் போன்றவற்றால் உயிரினங்கள் கடும் துன்பத்திற்கு உள்ளாவது ஏன்? 

*பிரபஞ்சத்தைப் படைத்தவர் கடவுள் என்றால் கடவுளைப் படைத்தவர் யார்? அவர் சுயமாக உருவானார் என்றால், பிரபஞ்சம் ஏன் சுயமாக உருவாகியிருக்க முடியாது?

*மேலான அறிவுள்ளவர் கடவுள் என்றால், அவரால் உருபவாக்கப்பட்ட அண்டவெளி நிகழ்வுகளில் ஓர் ஒழுங்கு தேவை. நட்சத்திரங்கள் கோள்கள் என்று அங்கிருப்பவை ஒன்றையொன்று விழுங்குவது, சிதறடிப்பது, சிதறுவது என்று எல்லாவற்றிலும் அவ்வொழுங்கு இல்லாதிருப்பது ஏன்?

*கடவுளை நம்பினால், சொர்க்கம் நரகம் போன்றவற்றையும் நம்ப வேண்டியுள்ளது. அவை இருப்பதற்கான ஆதாரங்களும் கண்டறியப்படவில்லைதானே? 

*கடவுளால் நிகழ்கின்றன என்று நம்பப்பட்ட நிகழ்வுகளுக்கும் கடவுள் எனப்படுபவருக்கும் சம்பந்தமே இல்லை என்று விஞ்ஞானம் நிரூபித்திருப்பதை ஏற்கலாம்தானே?

*கடவுள் நம்பிக்கை இல்லாமல் நிறைவாக வாழ்கிறவர்கள் இருக்கிறார்கள். அப்புறம் எதற்குக் கடவுள்?

ஆக.....

கடவுள் இல்லை என்று சொல்லுவதற்கான காரண காரியங்கள் நிறையவே உள்ளன. உள்ளார் என்பதற்கான உறுதியான ஆதாரங்கள் கண்டறியப்பட்டால் கடவுளை நம்புவதில் பிரச்சினை ஏதும் இல்ல.