எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வெள்ளி, 15 நவம்பர், 2024

கிறித்தவர்களின் விசித்திர மூடநம்பிக்கைகள்!!![இரவல் சரக்கு]

 Quora.com 'கேள்வி-பதில்’இல் இடம்பெற்றது.

வேதாகமத்தில் இல்லை. கிறிஸ்தவர்களிடம் உண்டு.

எனக்குத் தெரிந்தவற்றில் சில:

  1. அவர்களின் மனதிலிருக்கும் கேள்விக்கான தேவனின் பதிலைப் பெற, வேதாகமத்தை எதேச்சையாகப் புரட்டி, ஒரு வசனத்தைப் படித்து, அதை தேவன் கதைப்பதாக[தேவனின் பதிலாக] எடுத்துக்கொள்வது.
  2. வெள்ளை நிற ஆடை அணிவதால் பரிசுத்தவான்கள் ஆவதாக எண்ணுவது.
  3. சத்தமாக வேண்டிக்கொண்டால் தேவன் கேட்பார் என நம்புவது.
  4. அதிக வசனங்களால், விதவிதமான வசனங்களால் வேண்டிக்கொண்டால் அவர் கேட்பார் என எண்ணுவது.
  5. ஆசீர்வதிக்கப்பட்ட எண்ணெய்இறுவட்டு(CD), எருசலேமிலிருந்து கொண்டுவரப்பட்ட மண், ஜோர்தான் நதியின் நீர், இன்னும் இவை போன்றவற்றைப் புனிதமாகக் கருதுவது.
  6. எருசலேமுக்குப் புனிதப் பயணம் போவது.
  7. சிலுவைகளை வீட்டிலோ, வேலை பார்க்கும் இடங்களிலோ, வாகனங்களிலோ பாதுகாப்புக் கருதி வைத்திருப்பது.
  8. சிலுவை பென்டன் போட்ட மாலை அணிவது.
  9. வேதாகமத்தைத் தொட்டு வணங்குவது.
  10. நன்றி, பலி என்னும் பெயரில் சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்வது.
  11. சாத்தானைக் கட்டி(binding) ஜெபிப்பது.

  12. தாங்கள் விரும்பும் ஒரு விடயம் ஏற்கெனவே நடந்துவிட்டதாக நினைத்து தேவனிடத்தில் நன்றி சொல்வதால் அது அவ்வாறே உண்மையில் நடக்கும் என நம்புவது.
  13. வேதாகமத்தில் இல்லாத புதிய விடயங்களைத் தேவன் தங்களுக்கு அறியப்படுத்தியதாகக் கூறுபவர்களை நம்புவது.
  14. சிறுவர்கள்குழந்தைகளுக்கு திருமுழுக்கு வழங்குவது.
  15. இயேசுவை ஏற்றுக் கொண்டால் போதும், பாவங்களைவிட்டு மனந்திரும்ப வேண்டியதில்லை[?] என நம்புவது.
  16. விசுவாசிகளுக்குப் பூமியில் சாகாவரம் உண்டு என நம்புவது.
  17. அதிகமாகக் காணிக்கை கொடுத்தால் அதிகப் பலன் கிடைக்கும் என நம்புவது.
  18. சாதி வித்தியாசம் பார்ப்பது.
***நன்றி கஜனன் செல்வராஜ்.