எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 4 டிசம்பர், 2024

‘அது’ இப்போது வேண்டாம்! அப்போது பார்த்துக்கொள்ளலாம்!!

நமக்கு வாய்த்திருப்பது வெகு அற்ப வாழ்நாள். இப்போதோ வேறு எப்போதுமோ மரணம் நம்மை ஆரத்தழுவக் காத்திருக்கிறது.

கடவுளைத் தொழுவதால் தீராத துன்பங்கள் தீரும் என்பது நிரூபிக்கப்படாத நிலையில் வினாடிப் பொழுதையும் வீணாக்காமல் கடமையைச் செய்வோம்.


செத்தொழிந்த பிறகு நம் ஆன்மா வேலைவெட்டி எதுவும் இல்லாமல் எங்கெல்லாமோ அலைந்து திரிவது உண்மையானால், அப்போது அந்தக் கருணை வள்ளலாம் கடவுளை ஆசை தீர வழிபடலாம்[அதற்குச் சிந்திக்கும் திறன் இருந்தால்]; அவனின் திருவடி நிழலில் கிடந்தோ, அவனால் படைக்கப்பட்டதாகச் சொல்லப்படும் சொர்க்கத்தில் இடம்பிடித்தோ சுகபோகத்தில் மூழ்கித் திளைக்கலாம் அவன் உள்ளளவும்!


வாழ்க மனித இனம்! வளமுடன் வாழ்க கடவுள்[இருந்தால்]!!


யூடியூப் காணொலி:

https://youtube.com/shorts/wH6i3QW8AEY?si=jP3mlXogh0S4AFOp -சொடுக்குக!