திருப்பூர்: 'பிரதமர் மோடி அரசின் மும்மொழிக் கல்விக் கொள்கையில் ஹிந்தித் திணிப்பைக் கண்டுபிடித்தால், 99 லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என்று, பா.ஜ., சார்பில், திருப்பூரில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன[https://www.dinamalar.com/
மொழியை, அல்லது மொழிகளைக் கற்பது என்பது அறிவை வளர்ப்பதற்கும் வேலை வாய்ப்பைப் பெறுவதற்கும்தான். எனவே, ஒரே ஒரு மொழியைப் படிப்பதோ, இரண்டோ மூன்றோ அதற்கும் மேலேயோ மொழிகளைப் படிப்பதோ அவரவர் தேவையைப் பொருத்தது.
திணிக்கப்படும் மொழிகளில் இந்தியும் ஒன்று.
மும்மொழிச் சட்டம் அமலாக்கப்பட்டதும், இந்தி படித்தால் இன்னின்ன சலுகைகள் கிடைக்கும் என்று ஆசை காட்டி அனைவரையும் படிக்கத் தூண்டுவது ஒன்றிய ‘இந்தி’ய அரசின் உள்நோக்கம்[ஏற்கனவே தமிழ்நாட்டில் உள்ள அஞ்சலகம், காப்பீட்டு நிறுவனம், ரயில் நிலையம் போன்றவற்றில் இந்தி முழுமையாகத் திணிக்கப்பட்டுவிட்டது. இந்த அவல நிலையை மாற்றவே மிக மிக மிகப் பெரிய போராட்டம் நடத்தவேண்டியுள்ளது].
இதைப் புரிந்துகொள்ளும் குறைந்தபட்ச அறிவுகூடத் தமிழர்களுக்கு இல்லை என்று நினைத்து 99 லட்சம் ரூபாய் பரிசு அறிவித்த திருப்பூர் ‘பாஜக’காரனைப் போன்ற முட்டாள் உலகெங்கும் தேடினாலும் கிடைக்கமாட்டான்!
பரிசு அறிவித்த மூடனுக்கு நாம் சொல்லிக்கொள்ள விரும்புவது.....
உன்னுடைய இந்தப் பரிசுத் திட்டம் பற்றிய அறிவிப்பை உன் கட்சியின்[பாஜக] மேலிடத்துக்கு நீ தெரியப்படுத்தினால், இங்குள்ள பாஜக அடிமைகளின் தலைவனாக உன்னை நியமிப்பார்கள்[ஆட்டுக்காரனுக்குப் பதிலாக].
செய்வாயா?!
* * * * *