எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

சனி, 15 மார்ச், 2025

பிண்டத்தில்[உடம்பு]ஆன்மா! அண்டத்தில் ஆண்டவன்?[தத்துவப் பித்தர்களுக்கு மட்டும்]

தங்கள் பலவும் ‘ஆன்மா’ இருப்பதாகச் சொல்கின்றன.

அது இருப்பதாக நம்பப்படுவது மனித உடம்புக்குள்.

இந்த உடம்பு இருந்துகொண்டிருக்கவும் இயங்குவதற்கும் காரணமான இதயம், மூளை என்று பல உறுப்புகள் பற்றி விரிவாக ஆராய்ந்து சொல்லியிருக்கிறார்கள் அறிவியல் அறிஞர்கள்; ஆராய்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஆன்மிகர்களால் இதே உடம்புக்குள் இருப்பதாக நம்பப்படும் ‘ஆன்மா’ பற்றியும் அவர்கள் தீவிர ஆராய்ச்சியில் இறங்கக்கூடும்.

இன்றளவும் ஐம்புலன்களாலோ[பார்த்தோ கேட்டோ தீண்டியோ சுவைத்தோ நுகர்ந்தோ.....], ஆறாவது அறிவால் சிந்தித்தோ அறிய இயலாத ஆன்மா இருப்பது உண்மை என்பதை நிரூபிப்பது இன்றளவும் சாத்தியப்படவில்லை.

என்றேனும் ஒரு காலக்கட்டதில் அது சாத்தியப்படுமா என்னும் கேள்விக்கும் விடை அறிந்தார் இல்லை.

மனித உடம்புக்குள் இருப்பதாக நம்பப்படும் ஆன்மாவைக் கண்டறிவதே இப்போதைக்குச்[எப்போதைக்குமே?] சாத்தியம் இல்லை என்னும்போது, எல்லை அறியப்படாத அண்டவெளியிலும், அதிலுள்ள அனைத்திலும்[பொருள்கள், உயிர்கள்& பிற] இரண்டறக் கலந்திருப்பவர் என்று சொல்லப்படும் கடவுளை ஐம்புலன்களால் அறிவது, அல்லது ஆறாம் அறிவால் உணர்ந்தறிந்து உறுதிப்படுத்துவது சாத்தியம் ஆகுமா?

[அறிவியலாளரால் அண்மையில் அண்டவெளியில் கண்டுபிடிக்கப்பட்ட ‘ஒரிஜினல்’ கடவுள் இவர். நம் பிரதமர் மோடி இவருக்குக் கோயில் கட்டுவாரா?!]

ஆகுமோ ஆகாதோ, இருக்கும்வரை அமைதியாகவும், இயன்றவரை மன நிறைவுடனும் வாழ முயலுங்கள்; பிறர் அவ்வாறு வாழ்வதற்கும் உதவுங்கள்.