எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 12 மார்ச், 2025

புண்ணியப் ‘பாரத்’தின் தவப்புதல்வர் புனிதர் மோடிஜி வாழ்க!!!

[கண்கொள்ளாக் காட்சி!]

மொரிஷியஸ் தீவு நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாகப் புதன்கிழமை பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மொரிஷியஸின் சவன்னேவில் உள்ள 'கங்கா தலாவ்' புனித யாத்திரைத் தலத்தில் பூஜை செய்து[மணிப்பூர் கலவரம் அடங்கி அங்கே முழு அமைதி நிலவிட?] புனித கங்கை நீரை வழங்கினார். 

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலிலும் அவர் பிரார்த்தனை செய்தார்[மொரிஷியஸில் மிகவும் புனிதமான இந்துத் தலமாகக் கருதப்படும் 'கங்கா தலாவ்' நாட்டின் மையப்பகுதியில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான மலைப் பகுதியில் அமைந்துள்ளது].