எனது படம்
அனைத்துப் போதைகளைவிடவும் ‘அதிகாரப் போதை’ மிக மிக மிக ஆபத்தானது. நம் பிரதமர் மோடி இதிலிருந்து விடுபடாவிட்டால், ஒன்றுபட்டிருக்கும் நம் இந்தியாவைச் சிதைத்துச் சிதறடித்த ‘பெருமை’க்குரியவராக அவர் ஆவார். ‘பாரத மாதா’வின் சாபத்துக்கும் அவர் ஆளாகக்கூடும்!

புதன், 12 மார்ச், 2025

புண்ணியப் ‘பாரத்’தின் தவப்புதல்வர் புனிதர் மோடிஜி வாழ்க!!!

[கண்கொள்ளாக் காட்சி!]

மொரிஷியஸ் தீவு நாட்டிற்கு இரண்டு நாள் பயணமாகப் புதன்கிழமை பயணம் மேற்கொண்ட பிரதமர் நரேந்திர மோடி, மொரிஷியஸின் சவன்னேவில் உள்ள 'கங்கா தலாவ்' புனித யாத்திரைத் தலத்தில் பூஜை செய்து[மணிப்பூர் கலவரம் அடங்கி அங்கே முழு அமைதி நிலவிட?] புனித கங்கை நீரை வழங்கினார். 

சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்ட கோவிலிலும் அவர் பிரார்த்தனை செய்தார்[மொரிஷியஸில் மிகவும் புனிதமான இந்துத் தலமாகக் கருதப்படும் 'கங்கா தலாவ்' நாட்டின் மையப்பகுதியில் உள்ள ஒரு ஒதுக்குப்புறமான மலைப் பகுதியில் அமைந்துள்ளது].