எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

செவ்வாய், 1 ஏப்ரல், 2025

நித்தியானந்தா மரணம்!? இழப்பு யாருக்கு?


குற்றச் செயல்களில் ஈடுபட்ட இந்தப் போலிச் சாமியார் உயிரோடு இருந்தால், ஆன்மிகத்தின் பெயரால் பொய்ச் செய்திகளைப் பரப்பிக்கொண்டிருப்பான்; இறந்திருந்தால் இழப்பு ஏதுமில்லை; வருந்துவதும் தேவையற்றது.

நாம் வருந்துவது.....

'பாஜக’ நிர்வாகம் நினைத்திருந்தால் சில மணி நேரங்களில் இவனைக் கைது செய்து, இங்கே கொண்டுவந்து கம்பி எண்ண வைப்பது மிக எளிதாக இருந்தபோதும், ஓர் இந்துவாக விதம் விதமாய் வேடங்கள் தரித்து, தன்னால் இயன்றவரை மக்களை மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடாமல் தடுத்தானே, அது முட்டாள்களை நம்பி அரசியல் நடத்தும் ‘பாஜக’வினருக்குப் பெரிதும் உதவிகரமாக இருந்தது என்பதால்தான்.

உண்மையில் இவன் இறந்திருந்தால் அது ‘பாஜக’வுக்கு மட்டுமே பேரிழப்பாக அமையும்!