செவ்வாய், 8 ஏப்ரல், 2025

ஆட்டு மூளையன் அண்ணாமலைக்கு.....

 ‘மாநில முதல்வர்’ என்பவர் அந்த மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர். அவர் மக்களின் பிரதிநிதி.

முதலமைச்சரைப் போலவே பிரதம அமைச்சரும் மக்களின் பிரதிநிதிதான்[தேர்ந்தெடுத்தவர்களின் எண்ணிக்கை மாறுபடலாம்].

அந்தப் பிரதிநிதி[பிரதமர்]க்கு இந்தப் பிரதிநிதி[முதலமைச்சர்] அடிமையல்ல.

அவரை இவர் எதிர்கொண்டு வரவேற்பதோ, அவருக்கான நிகழ்வில் கலந்துகொள்வதோ[இருவருக்குமான புரிதலைப் பொருத்தது],  இவரின் விருப்பத்துக்கு உட்பட்டது.

ஒரு மாநிலத்தில் இடம்பெறும் பிரதமரின் நிகழ்ச்சியில் அந்த மாநில முதல்வர் கலந்துகொள்வது கட்டாயம் என்பதற்கான சட்ட விதி எதுவும் இல்லை.

உன் தலைவன் மோடி தமிழ் மக்களுக்குப் பணி செய்ய வந்ததாகச் சொல்லியிருக்கிறாய். அவர் வருவது பணி செய்ய அல்ல; தமிழையும் தமிழினத்தையும் பைசா செலவில்லாமல்[இந்தி& சமஸ்கிருத வளர்ச்சிக்கு ஒதுக்குகிற நிதியையும் தமிழுக்கு ஒதுக்குவதையும் ஒரு முறையேனும் ஒப்பிட்டுப்பார்] புகழ்ந்து பணிய வைப்பதற்காக.

நீ புத்திசாலியோ அல்லவோ, அவ்வப்போதைய உன்னுடைய பேச்சும் நடவடிக்கையும் நீ படு முட்டாள் என்பதையே பறைசாற்றுகின்றன.

உன் தலைவன்[கள்] இடுகிற பணிகளைச் செய்துமுடிப்பதோடு நிறுத்திக்கொண்டு, சுயமாக எதையும் சொல்லாமலோ செய்யாமலோ இருப்பதுதான் உன் அடிமைத் தொழிலுக்கு உகந்ததாக இருக்கும் என்பதை இனியேனும் புரிந்துகொள். 

                                        *   *   *   *   *
பரிந்துரை:
அடிமைத் தொழிலைத் தவிர்த்துவிட்டு, உன் மூதாதையர் செய்துவந்த விவசாயத் தொழிலை மேற்கொள்வது தன்மானத்துடன் நீ வாழ்ந்திடத் துணைபுரியும். செய்வாயா?