புதன், 9 ஏப்ரல், 2025

உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... அமைதி! கடவுள் எண்ணுகிறார்... “ஒன்று இரண்டு மூன்று...”

த்துவம் பேசுவோர், ‘முடிவிலி[Infinite]' பற்றி விவாதிப்பதுண்டு.

அதென்ன ‘முடிவிலி’?

‘முடிவு’ என்று ஒன்று இல்லாதது ‘முடிவிலி’. அதாவது, அது எதுவாயினும் எந்த வரம்பும் இல்லாதது[being without limits of any kind]. 

இதற்கு எடுத்துக்காட்டாக, ஒரு கோட்டில் உள்ள புள்ளிகளை எண்ணுவது, பிரபஞ்சத்திலுள்ள நட்சத்திரங்களைக் கணக்கிடுவது, “ஒன்று... இரண்டு... மூன்று... ” என்றிப்படி எண்களை இடைவிடாமல் எண்ணிக்கொண்டிருப்பது போன்றவற்றைச் சொல்லலாம்.

எண்களை மட்டுமே எண்ணுவது ஓர் எளிய எடுத்துக்காட்டு.

“ஒன்று இரண்டு மூன்று நான்கு ஐந்து.....” என்று உண்டு உறங்கிய நேரம் போக வாழ்நாளெல்லாம் எண்ணிக்கொண்டே இருப்பது[இது சாத்தியமா என்று கேள்வி எழுப்ப வேண்டாம், புரிய வைத்திட வேறு வழியில்லை என்பதால்]

‘100000000000000000000000.....’ எண்ணுவது எண்ணுபவர்களின் ஆயுள் உள்ளவரை நிகழும். அப்புறம்?

வாழ்ந்துகொண்டிருப்பவர்கள் அதைத் தொடரலாம்.

மனித இனம் உள்ளவரை தொடர்ந்து எண்ணுவது[100000000000000000000000000.....>முடிவில்லை] இயலும்.

இதுவும்கூட மனித இனம் உள்ளவரைதான்.

அப்புறம்?

என்றென்று இருந்துகொண்டே இருக்கிறவர்[‘ஆதி அந்தம்’ இல்லாதவர்] என்று சொல்லப்படுகிற கடவுளிடம்  இந்தப் பொறுப்பை ஒப்படைக்கலாம்[கடவுளால் அனுப்பப்பட்ட மோடியோ கடவுள்களின் குருவான ஜக்கியாரோ சிபாரிசு செய்தால் அவர் சம்மதிப்பார். ஹி... ஹி... ஹி!!!].

ஆனால், “அந்தக் கடவுளின் ‘எண்ணும் செயல்’கூட முடிவு பெறாது” என்பது அறியத்தக்கது.

ஆம், “ஒன்று ஒரண்டு மூன்று நான்கு ஐந்து.....” என்று எண்ணத் தொடங்கிய கடவுள் இன்றளவும்[இந்த நொடிவரை] எண்ணிக்கொண்டே இருக்கிறார்; எண்ணிக்கொண்டே இருக்கிறார்; எண்ணிக்கொண்டே இருக்கிறார்; எண்ணிக்.....

இதைத்தாங்க ‘முடிவிலி’[being without limits of any kind] ன்கிறார்கள் அறிவியலாளர்கள்.

இந்த ‘எண்ணுதல்’ என்னும் ஒரு செயலைச் செய்து முடிப்பதே மனிதர்களுக்குச்[கடவுளுக்கும்கூட] சாத்தியம் ஆகாத நிலையில், படைப்பு, அல்லது கடவுள் குறித்து, ‘ஏன், எப்போது, எப்படி’ என்றெல்லாம் கேள்விகள் கேட்டு, ஆளாளுக்கு ஒரு கடவுளைக் கற்பித்து மதங்களை உருவாக்கி, ஆதிக்க வெறியராய் அடித்துக்கொண்டு செத்தொழிந்தார்கள் நம் முன்னோர்களில் எண்ணற்றவர்கள்; இன்றளவும் சாதல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது.

இனியேனும், இம்மாதிரியான தவறுகளைச் செய்யாமல், ஒருவர் மீது ஒருவர் அன்பு செலுத்தி அமைதியாக வாழ்ந்து முடிப்பதே அறிவுடைமை ஆகும்.