“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

புதன், 9 ஜூலை, 2025

இன்பம் பயக்கும் இயக்குநீர்[கள்] சுரக்க... குதிக்கலாம்! கூத்தாடலாம்!! கட்டியணைக்கலாம்!!!

யக்குநீர்கள்[ஹார்மோன்கள்] நாளமில்லாச் ‘சுரப்பி’களால் உற்பத்தி செய்யப்படுகின்றன. 

இவை உடலின் செயல்பாடுகளைக் கட்டுப்படுத்தவும், சீராக வைத்திருக்கவும் உதவுகின்றன. 

இவை பல வகையின. இவற்றால் நாம் மிகப் பல நன்மைகளைப் பெறுகிறோம் என்கிறார்கள் மருத்துவ அறிவியலாளர்கள்.

இவற்றில் சிலவற்றை அறிந்திடக் கீழ்க்காணும் நகல் பதிவை வாசியுங்கள்.