கரூரில் நடிகர் விஜய் நடத்திய ஊர்வலத்தின்போது, கூட்ட நெரிசலில் முட்டி மோதி, விழுந்து மிதிபட்டு 41 பைத்தியங்கள் உயிரிழந்தன.
அதற்கு எவரெவரெல்லாமோ[பிரபல வலைப்பதிவர் ‘பசி’பரமசிவம் உட்பட!!!] கண்டனம் தெரிவித்து நடிகரை நிந்தித்தார்கள்[தற்கொலைக்குத் தூண்டும் அளவுக்கு].
செய்வதறியாது ஓடி ஒளிந்து, சற்றே மனம் தேறி, பாதிக்கப்பட்டவர்களை அழைத்து அவர்களின் கால்களைக் கண்ணீரால் கழுவி, அவர்கள் ஆறுதல் பெறும் வகையில் நிதியுதவியும் செய்தார் மானுடனான விஜய்.
நேற்று அதே போன்றதொரு அசம்பாவிதம்* நிகழ்ந்துள்ளது.
நடிகர் விஜய்க்குக் கண்டனம் தெரிவித்த நீதிமான்களில் எவரொருவரும் வெங்கடேஸ்வரனுக்குக் கண்டனம் தெரிவித்ததாக அறியப்படவில்லை.
நம் கேள்வி:
பக்திமான்களே, இல்லாத சாமி மீது உங்களுக்கு இத்தனைப் பயமா?! நீங்கள் சிந்திக்கக் கற்பது எப்போது?
* * * * *
*https://tamil.news18.com/national/srikakulam-venkateswara-swami-temple-crowd-crush-9-dead-vjr-ws-l-1959061.html -November 01, 2025

