எனது படம்
அறிவியல் தொடர்பான பதிவுகள் எனக்குள்ள ஆர்வம் காரணமாக எழுதப்படுபவை. அவற்றில் சில சிறு பிழைகள் இடம்பெறினும், பல தகவல்கள் நீங்கள் அறியத்தக்கனவாக அமையும் என்பது என் நம்பிக்கை. வருகைக்கு நன்றி.

செவ்வாய், 13 ஜனவரி, 2026

அணுவும் அணுக்களும் கடவுளும்... ஒரு சிறு குறு ஆய்வு!

//பொருள்கள் உருவாகக் காரணமாக இருப்பவை அணுக்கள். பொருள்கள் அழிந்தாலும்,  மீண்டும் மீண்டும் இணைந்து வேறு வேறு வடிவங்களாக[பொருள்களாக> உயிர்களாக] அணுக்கள் மாறுகின்றனவே தவிர அழிவதில்லை. மேலும், அவை சுழற்சியில்[அண்டவெளியில்> பிரபஞ்சத்தில்] இருந்துகொண்டே இருக்கின்றன//

இதன் மூலம், அணுக்கள் இணைவதையும்[இரண்டறக் கலந்து?] பிரிவதையும் வழக்கமாக்கிகொண்டிருப்பவை என்பதை அறிய இயலுகிறது.

இங்கே ‘அணுக்கள்’ என்பது அணுக் கூட்டத்தைக் குறிக்கிறது. அதாவது, கூட்டமாக இயங்குகிற அணுக்களில் எதுவும் அழிவதில்லை என்பதும் உறுதியாகிறது.

கூட்டமாக இயங்கும்போது எந்தவொரு அணுவும் அழிவதில்லை என்றால்.....

ஓர் அணு தனித்திருக்கும்போதும் அழியாமல் இருக்குமா? 

இணையத் தேடலில் கிடைத்த விடை:

  • அறிவியல் ஆராய்ச்சிகளின்படி, அது அழிவதில்லை.

  • Scanning Tunneling Microscope (STM) மற்றும் Atomic Force Microscope (AFM) போன்ற கருவிகள் மூலம் தனி அணுக்களைப் பிடித்து நகர்த்த முடியும், இது அணுக்கள் தனித்து இயங்க முடியும் என்பதைக் காட்டுகிறது; அது ஒரு ஆதரவுப் பொருளுடன் இணைந்து ஒரு அமைப்பாகச் செயல்படுகிறது. வாயு நிலையில்(Gaseous state): அணுக்கள் வாயு நிலையில் தனித்திருக்கலாம், ஆனால் திடப்பொருட்களில் அவை பெரும்பாலும் கூட்டாகவே இருக்கும். 

  • சுருக்கமாக, அறிவியல் நுட்பங்களைப் பயன்படுத்தி ஓர் அணுவைத் தனிமைப்படுத்தி இயக்க முடியும்[விரிவான தகவல்கள் இங்கு இடம்பெறவில்லை]. ஆனால் இயற்கையில், அணுக்கள் பெரும்பாலும் கூட்டாகவே இயங்குகின்றன.

ஐயம்:

அணு தனித்து இயங்கட்டும், கூட்டணி[அணுக் கூட்டம்] சேர்ந்தும் இயங்கட்டும், சுற்றிவளைத்து இங்கே முன்வைக்கப்படும் கேள்வி.....

அண்டவெளியிலுள்ள கணக்கிலடங்காத அணுக்களுக்கு அழிவே இல்லை என்றால், இவற்றை[என்றென்றும் இருந்துகொண்டே இருப்பவை]ப் படைப்பதற்கு எவரும் தேவையில்லை என்பதை அறிய இயலுகிறது. அப்புறம் ஏன் இந்தக் கூரு கெட்ட மனிதர்கள் கடவுளென்று ஒருவரைக் கற்பனை செய்து அவருக்குக் கோயில்கள் கட்டி, வழிபாடுகள் நிகழ்த்திக் கூத்தடிக்கிறார்கள்?                                                         *   *   *  *  * 
*****அணு அழிவின்மை விதி(Law of Conservation of Mass): பொருள்கள் உருவாவதற்கு மூல காரணமாக இருக்கும் அணுக்கள், ஒருபோதும் உருவாக்கப்படுவதோ அழிக்கப்படுவதோ இல்லை; மாற்றப்படுகின்றன.

உடல் சிதைவு: நம் உடல் அணுக்களால் ஆன மூலக்கூறுகளால் ஆனது; நாம் இறந்த பிறகு, இந்த மூலக்கூறுகள் சிதைந்து, அணுக்கள் மீண்டும் மண்ணில் கலந்து, தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களின் பகுதிகளாக மாறுகின்றன.

புதிய வடிவங்கள்: ஒரு கட்டிடம் இடிந்து போனாலும் அல்லது ஒரு பொருள் எரிந்து போனாலும், அதிலுள்ள அணுக்கள் அழிவதில்லை; அவை காற்று, சாம்பல் மற்றும் பிற பொருட்களின் பகுதிகளாக மாறுகின்றன.