அமேசான் கிண்டிலில் என்னுடைய 49 நூல்கள் உள்ளன. அவற்றில் சிலவோ பலவோ உங்களுக்கு மிகவும் பயனுள்ளவையாக அமையும் என்பது என் நம்பிக்கை. நீங்கள் கிண்டில் சந்தாதாரராக இருப்பின், எந்தவொரு நூலையும் இலவசமாக வாசிக்கலாம்[அமேசான் கிண்டிலில் ‘என் பக்கம்’... சொடுக்குக]. நன்றி!

ஞாயிறு, 1 செப்டம்பர், 2013

‘பாவை’யொருத்தி தரும்‘முத்தமும்’ பதிவர் விழாவுக்கு ஈடில்லை!

#“மங்கை யொருத்தி தரும்சுகமும் எங்கள் மாதமிழுக்கு ஈடில்லை”-பாரதிதாசன்.#



கைபேசி சிணுங்கியது.

“வணக்கம்...நான் நித்திலன்.”

“நான்...நான்...கவிமலர்.”

[நித்திலனும் கவிமலரும் காதலர்கள்]

“சொல்லு கவி.”

“இப்போ உனக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட் தரப் போறேன். மனசைத் திடப் படுத்திக்கோ.”

“சஸ்பென்ஸெல்லாம் வேண்டாம். விசயத்தைச் சொல்லுடி.”

“என்னைப் பார்க்கும்போதெல்லாம் ‘ஒன்னு கொடு ஒன்னு கொடு’ன்னு கெஞ்சுவியே, அதை இப்போ கொடுத்துடறதா முடிவு பண்ணிட்டேன். உடனே புறப்பட்டு வாடா.”

“வரமாட்டேன்.”

“ஃபூல், உனக்கு என்னடா ஆச்சு?”

“காணொளி மூலமா சென்னையில் நடக்குற பதிவர் திருவிழா பார்த்துட்டிருக்கேன்.”

”நானும் அதைத்தாண்டா பார்த்துட்டிருக்கேன். சும்மானாச்சும் உன்னை உசுப்பிவிட்டு வேடிக்கை பார்த்தேன். நம்ம பதிவர்கள் ஆளாளுக்குக் கலக்குறாங்கடா. இந்த மாதிரி விழாக்களால தமிழ் வலைத்தளங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்; தமிழும் வளரும்.”

“சந்தேகமில்ல. ஆனா.....”

“எதுக்குடா இந்த ஆனா போனா எல்லாம்? மனசில் இருக்குறதைக் கக்குடா.”

”என்னால கலந்துக்க முடியலையேன்னு ரொம்ப வருத்தமா இருக்கு கவி.”

”வருத்தப்படாதே கண்ணு. அடுத்த ஆண்டுப் பதிவர் திருவிழாவில் நாம ரெண்டு பேரும் கலந்துக்கலாம். சந்தோசம்தானே?”

“சந்தோசம். ஆனா.....”

“என்னடா மறுபடியும் ஆனா ஆவன்னா? போட்டு உடை.”

“அது வந்து...அது வந்து...”

“போடா தொடை நடுங்கி. நாளை சந்திக்கும்போது, ‘ஒன்னே ஒன்னு கொடு’ன்னு கேக்கப் போறே. ஒன்னென்ன ஒன்பது முத்தம் தர்றேன். சந்தோசமா காணொளியைப் பாருடா ராசா.”

ccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccccc 

.

நன்றி:  தமிழ்வாசி பிரகாஸ்
நன்றி: வலையகம் திரட்டி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக