வியாழன், 29 ஆகஸ்ட், 2013

'காதல்’ கவிஞர்களும் கண்ணீர் வடிக்கும் கன்னிப் பெண்களும்!

பெண் அழகாக இருந்துவிட்டால், அவள் போடும் ‘குறட்டை’ யையும் ‘குசு’வையும்கூடக் கவிதை’ ஆக்குவார்கள் நம் கவிஞர்கள்!


நீங்கள் ’காதல் கவிதை’ படைக்கும் கவிஞரா?

“ஆம்” என்றால், மெத்த மகிழ்ச்சி. உங்கள் வரவைத்தான் நான் ஆவலுடன் எதிர்பார்த்திருந்தேன்.

கவிஞரே,

சுற்றி வளைக்காமல் பிரச்சினையை முன் வைக்கிறேன்.

மாம்பழக் கன்னங்களும், மது ஊறிப் பளபளக்கும் உதடுகளும், பருத்துக் கொழுத்த கொங்கைகளும் கொண்ட அழகிய பெண்களைப் பார்க்கும்போதுதான் உங்களுக்குக் கவிதையே பிறக்கிறது என்று நான் சொன்னால், அதை நீங்கள் ஏற்பீர்களா, மறுப்பீர்களா?


The Dove<sup>®</sup> Campaign for Real Beauty
உங்களால் மறுக்க முடியாது. ஏனென்றால், இதற்கு ஏராள உதாரணங்களை என்னால் தர முடியும். வேண்டாம், ஆபாசம் கலவாத சில காதல் கவிதைகள் மட்டும் இங்கே.........

 ‘என் இதயத்தின் நீரெல்லாம் 
ஓட மறுத்து
ஒரு நிமிடம் உறைந்து
உன் அழகை ரசிக்குதடி
உன்னை முத்தமிட துடிக்குதடி’   

இது சத்தியசீலன் ராஜேந்திரன் என்ற கவிஞரின் கவிதை  [‘கிறுக்கல்கள்’]

இங்க காதலும் இல்ல, கத்தரிக்காயும் இல்ல. எல்லாம் அழகு தரும் போதை


’நீ உன் பாதம் கழுவிய
நீரைக் கொடுக்கிறாயா?…
அழகின் கடவுளுக்கு
அபிஷேகம் செய்ய வேண்டும்’
[மன்னிக்கவும்...கவிஞர் பெயர் மறந்துவிட்டது]

[கடவுளுக்கு நேர்ந்த கதியைப் பார்த்தீங்களா?

ஒரு கவிஞனின் பார்வையில் ஓர் அழகியின் பாதம் கழுவிய நீர் கங்கையின் புனித நீருக்குச் சமம் ஆகிவிட்டதைக் கவனிச்சீங்களா?

நான் மட்டும் ஒரு கவிஞனா இருந்திருந்தா, அழகியின் சிறுநீரைப் புனிதமாக்கி ஒரு கவிதை பாடியிருப்பேன். முகம் சுழிக்காதீங்க.]

‘பூக்கள் கூட 
உன்னைப்போல் வெண்மை இல்லையே.
உன்னைப் போல் பெண்ணைப்
பூமி பார்த்ததில்லையே!    [’தமிழ், காதல் கவிதைகள் உலகம்’]

[ஆக, இவளைப் பார்க்கணும்னா தேவருலகம் போகணுங்களா? போனா, திரும்பி வருவோமா?]

மேலே குறிப்பிட்ட இவர்களெல்லாம் பிரபலம் ஆகத் துடிக்கும் கவிஞர்கள்.

பிரபலம் ஆன [மிக மிக மிக] ஒரு கவிஞரின் கவிதை கீழே...........

’அன்பே !
அந்த நதிக்கரையில்
உன் கைக்குட்டை ஒன்றைக்
கண்டெடுத்தேன் !
அது கைக்குட்டையா?
இல்லை
காதல் தேவதை
தன் ஒரு சிறகை
உதிர்த்து விட்டுப்
போய் விட்டதா’


[யாருன்னு தெரியுதுங்களா?

கவிப்பேரரசு வைரமுத்துங்க!

கவனிச்சீங்களா, இவருடைய கவிதைத் தலைவியும் ஓர் அழகு தேவதைதான்]

கவிஞரே, [வைரமுத்து அல்ல; பதிவைப் படித்துக் கொண்டிருக்கும் கவிஞர்] 

இப்போ நீங்க, “பிரபலம் என்ன, அல்லாதவர் என்ன, எல்லாக் கவிஞர்களுமே அழகான பெண்களை நினைச்சித்தான் கவிதைகள் படைக்கிறாங்க. அதுக்கென்ன இப்போ?”ன்னு முணுமுணுத்திட்டிருக்கீங்கதானே?

பதில் சொல்றேன். கொஞ்சம் பொறுங்க. அதுக்கு முன்னாடி இன்னொரு கேள்வி..........

நீங்களெல்லாம் காதல் கவிதைகள் எழுதுவது யாருக்காக? யாரையெல்லாம் மனதில் இருத்திக் கவிதை படைக்கிறீர்கள்?

“இளைஞர்களுக்காகவும் இளம் பெண்களுக்காகவும்” என்று நீங்கள் சொன்னால், அது மிகச் சரியான பதில்.

அடுத்து ஒரு கேள்வி..........

உங்களின் படைப்புகள் அவர்களைப் பாதிக்கிறதா?

“ஆம்” என்றுதான் நிச்சயம் பதில் தருவீர்கள்.

எதார்த்த வாழ்வுக்கு எந்த வகையிலும் தொடர்பில்லாத உங்கள் கவிதைகளைப் படித்துவிட்டு, மிதமிஞ்சிய காதல் போதையில் மூழ்கி நம் இளைஞர்கள் கெட்டுச் சீரழிந்து போகிறார்கள் என்பது நாடறிந்த உண்மை. உங்களுக்கும் தெரியும்.

பெண்கள் நிலை?

உங்கள் கவிதைகளைப் படிக்கிற ஒரு பெண், நீங்கள் கண்முன் நிறுத்துகிற தேவதைகள் போல் பேரழகியாக இருந்தால், உள்ளம் மகிழ்வாள்; உச்சி குளிர்வாள்.

ஆனால், நம் பெண்களில் எத்தனை சதவீதம் பேர் பேரழகிகள் அல்லது அழகிகள்?

இது  பற்றி நீங்கள் ஒரு முறையேனும் யோசித்திருக்கிறீர்களா?

இல்லைதானே?

உலகில், ஜெர்மன்காரிகள்தான் பேரழகிகளாம். உலக நாடுகளில் நம்பர் 1 அழகிகள் உலவும் நாடு ஜெர்மனிதான் என்கிறது புள்ளிவிவரம். [www.shareranks.com]

[நம் நாட்டுப் பெண்களின் தரவரிசை என்னன்னு கேட்கிறீங்கதானே?

சொல்லிடுறேன். இல்லேன்னா மேலே படிக்க மாட்டீங்க.

rank:  9     தேவலாம்தாங்க.

இடைப்பட்டதையும் சொல்லிடுறேன்.

2. பிரேஸில், 3. ஸ்வீடன், 4. அமெரிக்கா, 5. ஜப்பான், 6. போலந்து, 7. ரஸியா, 8. ஃபிலிபைன்ஸ். 9. இந்தியா.

இந்தியாவுக்குப் பின்னாடிதான் இத்தாலி, இங்கிலாந்து, ஜெர்மனி எல்லாம் வருது.

Hot...Hottest...பிரேஸில்தானாம்.]

இதெல்லார்த்தையும் விட்டுத் தள்ளிட்டு விசயத்துக்கு வருவோம்.....

மானாவாரியா அழகிகள் நடமாடுற இந்த ஜெர்மன் நாட்டுப் பெண்களில், 2% பெண்கள் மட்டும்தான் தங்களை அழகிகள் என்று ஒத்துக்கிறாங்களாம். மற்ற 98% பெண்கள், விளம்பரங்களில் இடம்பெறும் அழகுப் பெண்களோடு தங்களை ஒப்பிட்டு, “நாங்கெல்லாம் ரொம்ப விகாரமா [ugly] இருக்கோம்”னு சொல்லி ரொம்பவே மனசு நொந்துபோய் இருக்காங்களாம்.


இந்த நாடு மட்டுமல்ல, அழகிகள் கொட்டிக் கிடக்கிறதா சொல்லப்படுற முதல் பத்து நாடுகளைச் சேர்ந்த பெண்களும் இதே கதியில்தான் புலம்பித் திரியறாங்களாம். [ஆதாரம்: www.prnewswire.com]

அது மட்டுமல்ல, உலகம் முழுக்கவே, 2% பெண்கள்தான் தங்களை அழகிகள்னு நினைக்கிறாங்களாம். [எந்தப் பெண்ணும், தான் அழகி இல்லேன்னு சாதரணமா சொல்ல மாட்டாள். உண்மை அதுதான்னா,, இந்த 2% கூட அதிகம்தான்]

ஆக, உலக அளவில், 98% பெண்கள் தாங்கள் அழகிகள் அல்ல என்று சொல்கிறார்கள். [www.dove.us/compain-for-real-beauty.aspx]

காதல் கவிஞர்களின் கண்கொண்டு ஆராய்ந்து கணக்கெடுத்தா, நம் நாட்டுப் பெண்களில் லட்சத்தில் ஒருவர் தேறுவதே கடினம்தான்.

எனவே, கவிஞரே, மீண்டும் உம்மிடமும் உம்மை ஒத்த காதல் கவிஞர்களிடமும் நான் சொல்ல விரும்புவது........

லட்சத்தில் ஒரு பெண்ணுக்காகவே நீங்கள் காதல் கவிதை எழுதுகிறீர்கள்.

ஏனைய 99999/100000 பெண்கள், உங்களுடைய கவிதைகளைப் படித்துவிட்டு,  ‘நாம் அழகியாக இல்லையே’ என்று ஏங்குகிறார்கள்; மனம் வருந்துகிறார்கள்

கவிஞரே...கவிஞர்களே.

இனியேனும்..........

நம் பெண்களை, இம்மண்ணில் நடமாடும் பெண்களாகவே நினைத்துக் கவிதை புனையுங்கள். அவர்களை ஒரு போதும் தேவதைகள் ஆக்காதீர்கள்.

#####################################################################################