எனது படம்
“எல்லாம் அவன் செயல்” என்பவர்கள் ஆறறிவின் வளர்ச்சிக்கு முற்றுப்புள்ளி வைப்பவர்கள். இவர்களின் எண்ணிக்கை பெருகப் பெருக மூடநம்பிக்கைகளின் அளவும் அதிகரிக்கிறது. நாட்டை ஆள்வதற்கான தகுதியே இல்லாத சுயநலவாதிகள் இதைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துகிறார்கள். மூடத்தனங்களிலிருந்து மக்கள் முற்றிலுமாய் விடுபடும்போதுதான் நாடு உண்மையில் சுதந்திரம் பெற்றதாக ஆகிறது.

வியாழன், 5 செப்டம்பர், 2013

என் பதிவில் நேர்ந்த பெரும் பிழை!...மன்னிப்பு வேண்டல்.

இன்று [05.09.2013] காலை நான் வெளியிட்ட ‘ஐன்ஸ்டீனின் சார்பியல் கொள்கையைக் கேள்விக்குள்ளாக்கும் ஒரு தமிழர்’ என்னும் பதிவில்.....

General Relativity Theory [பொதுச் சார்பியல் கொள்கை] என்பதை, Public Relativity Theory என்று தவறுதலாகப் பதிவிட்டுவிட்டேன்.

வெளியூர்ப் பயணத்திற்குப் பிறகு களைப்புற்ற நிலையில் பதிவு எழுதியதால் இப்பிழை நேர்ந்துவிட்டது.

இதை இப்போது சரி செய்துவிட்டேன்.

இது கண்டிக்கத் தக்க மிகப் பெரும் பிழை என்பதால், அனைத்து வாசகரிடமும் மன்னிப்பு வேண்டுகிறேன்.

இனியும் இம்மாதிரிப் பிழைகள் நேராவண்ணம் விழிப்புடன் செயல்படுவேன் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்பு கொண்டு, இனியும் பிழை தென்பட்டால் திருத்தி உதவுங்கள். பின்னூட்டப் பெட்டி திறக்கப்பட்டுள்ளது.

நன்றியுடன்..............................................................................காமக்கிழத்தன்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக